மானசா, ஆறு குழந்தை பெத்துக்கறது. ஆனா, எனக்கு சந்தோஷமாயிருக்கு. உன்கிட்ட, ஒவ்வொரு முறை நீ செக்கப்க்கு வரும்போது கேட்கணும்னு நினைப்பேன், ஆனா கேக்கல. இப்போ கேட்கலாம்னு பார்க்கறேன். என்னன்னு ஒனக்கு சொல்லணும்னு தோணித்துன்னா சொல்லு.. உன் உடம்புல ரொம்ப ரணம் இருக்கிறது , அது என்னன்னு சொல்ல முடிஞ்சா சொல்லு ,இது கவுன்சலிங் மாதிரித்தான், ஒரு வேளை நம்மோட இந்த பேச்சுனால ஒன்னோட பியூச்சர் மாறினாலும் மாறும். ஓரளவுக்கு ஒன்னோட ப்ராப்லம் எனக்கு புரியுது. ஆனா, உன் மனம் விட்டு பேசினாத்தான் என்ன ரூட் ப்ராப்லம்ன்னு தெரியும், அதற்கு தீர்வும் கொடுக்க முடியும்." என்று டாக்டர் கூறியவுடன், அவள் கேவி கேவி அழுதாள் தன் மனதில் உள்ளதை யாரிடம் கூறுவது என்று தெரியாமல் தவித்தவளுக்கு ஒருவர் தன் குறையை கேட்டவுடன் அவளையும் மீறி தன் மனதில் இருந்த அழுத்தம் அழுகையாய் வெளிவந்தது.
அவள் தன் மனதை திறந்தாள். டாக்டரிடம் அவர்கள் கல்யாணம் நடந்த முறையை கூறினாள். "என் கணவர் தன் காதல், தன்மானம் , அதுதான் முக்கியம்னு என்னோட வாழ்க்கை என் உறவு எல்லாத்தையும் முறிச்சுட்டார், அந்த கோபத்திலேயே அவரை நிராகரித்தேன். ஆனால் அவரோ என்னை நிர்பந்த படுத்தி என்னை இந்த நிலைமைக்கு ஆளாக்கிட்டார், என்னை தினமும் புண்ணாக்கறார்...." என்று குலுங்கினாள்.
"நீ அழு, உன்னோட மனசு லேசாகும் வரை அழு...."
அவள் அழுது முடித்ததும், "சாரி டாக்டர்!" என்றாள் மானசா.
"பரவாயில்ல மானசா, அழுதா மனசு லேசாகும், அப்புறம் நாம மனசு விட்டு பேசலாம்.. நீ சொன்னதுலேர்ந்து ஒன்னு தெரியுது மானசா, உன்னோட கணவர் ஒன்ன ரொம்ப காதலிக்கறார்... அது மட்டுமில்ல அவர் உன் மேல ரொம்ப பொஸசிவ்வா இருக்கார், அதனாலதான் இப்படி நடந்திருக்காரு மானசா.."
"காதலிக்கறது தப்புல்ல டாக்டர், ஆனா மத்தவங்களும் காதலிக்கறாங்களான்னு தெரிஞ்சுக்கணும் இல்லையா? அது மட்டுமில்ல அவரே காதலிச்சு, அவரே வீட்டுக்கு வந்து விவாஹம்ன்னு தாலியை எடுத்து கட்டினா எப்படி? என்னோட அம்மையும், அச்சனும் என்ன ஒதுக்கியே வச்சுட்டாங்க டாக்டர், இதெல்லாத்துக்கும் மேல ...." என்று மறுபடியும் குலுங்கி