(Reading time: 10 - 19 minutes)
Manasa Theevu
Manasa Theevu

அவள் பயந்துக்கொண்டே அள்ளி போட்டுக்கொண்டாள்.. அவள் விழி பிதுங்கி கொண்டிருந்தது... அவள் பாதி கூட முடிக்கவில்லை “எனக்கு போதும்" என்றாள்  பயத்துடன்.

  

"இனி எந்த தொந்தரவும் கொடுக்காம சாப்பிடணும் இல்லேன்னா இப்படித்தான் நான் சாப்பிடவைப்பேன் புரிஞ்சுதா?" என்று கர்ஜித்தான், அவள் பயத்தில் பின் வாங்கினாள்.

  

 

  

அவன் அவளுக்காக வாங்கியிருந்த புடவைகளையும் மற்ற ட்ரெஸ்களையும், அத்தனையையும் அவள் வார்டுரோபில் அடுக்கி வைக்க சொன்னான். நிறைய நகைகளும் வாங்கி வந்து அவளிடம் கொடுத்தான். "இதெல்லாம் எனக்கெதுக்கு, இதெல்லாம் யாருக்காவது கொடுங்க.."

  

"எனக்கு எல்லாமே நீதான், வேறு யாருமில்ல மானசி... " என்று அவளிடம் அணுகினான்.

  

"நீங்க என்கிட்டே கூட வரக் கூடாது... தள்ளி இருங்கோ!"

  

"நீ என் பார்யா, எனக்கு எல்லா உரிமையும் இருக்கு பேசாம இரு. எல்லாம் சரியாயிடும்."

  

"என்ன விட்டுடுங்க ப்ளீஸ்" என்று அழுதாள்.

  

அந்த அழுகையை பார்க்க முடியாமல், அவன் அங்கிருந்து அகன்றான். இப்படியே ஒரு வாரம் போனது. ஆனால் ஒரு வாரத்திற்கு பிறகு, அவளை பலவந்தமாக அடைந்தான், அவளை ரணப்படுத்தினான், அவன் ரவுத்ரமாய் அவளை ஆட்கொண்டான்.

  

அவள் அழுதாள் அழுதாள், இரண்டு நாள் உடம்பு சரியில்லாமல், எழவும் முடியாமல் கஷ்டப் பட்டாள். அவனும் ஒரு வாரம் அவளை பார்க்க வரவில்லை. வேலை ஆட்கள் அவளுக்கு நாட்டு மருந்தும், சாப்பாடும் கொண்டு வந்து கொடுத்தார்கள். அவன் மறுபடியும் ஒரு வாரம் பொறுத்து வந்து அவளை பலவந்தப் படுத்தினான், இப்படிதான் வந்தது அந்த குழந்தை... அவள் நினைத்து நினைத்து கண்ணீர் வடித்தாள். அவனும், இப்படியே அவளுடன் குடும்பம் நடத்தினான்.

2 comments

  • I sincerely Thank for your complete support. It's so encouraging. Hope you will like the whole novel. I look forward to your continuing feedbacks,<br /><br />VJG
  • :clap: cute epi.maanasavin manam maarividum endru nambuvom.eagerly waiting 4 next epi. :thnkx: & :GL:

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.