குலுங்கி அழுதாள் .
"மானசா, ஒன்னு சொல்லட்டுமா? பழைய நினைவை ஒதுக்கி வச்சுடும்மா... ஏன்னா, அது முடிஞ்சு போன கதை, இப்போ நடை முறைக்கு வா. உனக்கு இது ஆறாவது குழந்தை, நீ ரொம்ப வீக்காயிருக்க மானசா, இந்த குழந்தை பெத்துக்க உனக்கு திடம் வேணாமா? நல்லா சாப்பிடனும்மா மானசா, ஏற்கனவே ஐஞ்சு குழந்தைகளை பெத்தவம்மா நீ, ஒனக்கு நான் சொல்ல வேணாம் .... நான் சொல்றதெல்லாம் ஒண்ணுதான். நீ மனச மாத்திக்கோ, உன் கணவரை நேசிக்க ஆரம்பி, அதத்தான் அவர் எதிர்பார்க்கறதுன்னு நினைக்கறேன், அவரை நேசிக்க ஆரம்பிச்சுட்டா அவர் மனசு மாறுவார், உன்னை உள்ளங்கையில் வச்சு தாங்குவார். இனி போனதெல்லாம் போகட்டும், உனக்கும் வேறு யாருமில்லை. அவர்தான் இனி உன் வாழ்க்கையில், இந்த குழந்தைகளோட பிற்காலத்தை பத்தி நீ யோசிச்சியா? அது முக்கியமில்லையா? எனக்கு புரியறது, உன் கணவன் உன்கிட்ட கேக்காம உன்ன கல்யாணம் பண்ணது, உன்னை பலவந்தப் படுத்தியது, உன்னை ரணப்படுத்தியது எல்லாமே பெரிய தப்புத்தான் இதுக்கு அவருக்கு என்ன பனிஷ்மென்ட் வேண்ணாலும் கொடுக்கலாம்? ஆனா, நீ இன்னும் அவரோடத்தானே வாழ்ந்துண்டிருக்கே, இன்னும் பிள்ளையை பெத்துண்டிருக்க, உன் குழந்தைகளோட சந்தோஷத்துக்காகவும், உன்னோட சந்தோஷம், நிம்மதி, உன் கணவரோட நிம்மதி, சந்தோஷம் எல்லாம் உன்ன்னோட மாறுதல்லத்தான் இருக்கு மானசா, நீ செய்வியா?"
"என்ன பண்றது நான் இனி மாறி என்ன பண்றது ? சொல்லுங்க டாக்டர்?"
"நீங்க உங்க கணவர் மேல அன்பா இருக்கணும், அவரை காதலிக்கனும். ..."
"இந்த வயசுக்குமேல காதலிக்கணுமா? ஐஞ்சு குழந்தைகளை பெத்ததுக்கப்புறம் காதலா?"
"உன் கணவர் எதிர்பார்க்கறதெல்லாம் உன்னோட அன்பும், காதலும்தான். அது கிடைச்சா, உன் கணவர் மாறிடுவார். உன் கணவர் மாறனும் மானசா, உன் கணவன் சந்தோஷம்தான் உன் குடும்பத்தோட சந்தோஷம் மானசா, நீ செய்வியா? "
அவள் கண்களில் கண்ணீரோடு, " நான் ட்ரை பண்றேன் டாக்டர்."
"குட், ட்ரை பண்ணும்மா அதுதான் உனக்கு நல்லது... நீ சந்தோஷமா இருக்கணும் மானசா,