சென்னை
மித்ரவிந்தாவின் வீடு வந்து சேர்ந்தபின்புதான் இளஞ்சேரனுக்கு நிம்மதியானது. திரும்பவும் மழை வெள்ளம் என எதையாவது சொல்லிவிட்டால் கஷ்டம் என நினைத்து சற்று பயத்துடனேயே பயணம் செய்தான். எப்படியோ சென்னைக்கு மித்ராவுடன் வந்து பத்திரமாக வீட்டையும் அடைந்துவிட்டான். வீடு வந்து சேர்ந்ததும் இருவருக்கும் சந்தோஷமாக இருந்தது.
”வீட்டுக்கு வந்தாச்சி” என்றாள் மித்ரா சந்தோஷத்துடன்
அவளிடம் சென்றவன்
”பசிக்குதுடி பொண்டாட்டி” என இறுக்கமாக அணைத்துக் கொள்ளவே அவளோ வேறு நினைத்து வெட்கப்பட
”சீய்ய் இதெல்லாம் தப்பு” என்றாள் அவனோ பசியிலும் சிரித்தபடியே
”சரிம்மா சரி இப்ப நான் போய் ஓட்டல்ல சாப்பாடு வாங்கிட்டு வந்துடறேன்”
”இல்லை வேணாம் இருங்க நான் பிட்ஸா ஆர்டர் பண்றேன்”
”அதெல்லாம் வேணாம் நான் ஓட்டல்ல நல்லதா புல்மீல் சாப்பாடு வாங்கிட்டு வந்துடறேன்”
“எப்படியும் 5 நாளாவது வீட்ல இருக்கனும், அதுக்காக வீட்டுக்கு தேவையானதை வாங்கிட்டு வரலாம் வாங்க”
”என்ன வேணும் சொல்லு நானே வாங்கிட்டு வரேன்”
“அப்படியா சரி அப்ப ம் காய்கறிங்க வாங்கிட்டு வாங்க போதும் மீதியெல்லாம் வீட்ல இருக்கு” என சொல்ல அவனும் அவளை விட்டுவிட்டு
Sasirekha has written more than 33 Tamil series in Chillzee and many more Novels in Chillzee KiMo.