"எனக்கும் நிறைய பேசணும். " மானசா
"பேசலாம், ஞான் ரெடி " என்றான் மாதவன்
“நிங்கள் மொதல்ல சொல்லுங்கோ”
“ ஐ அம் சாரி…. ஞான் ரொம்ப மோசமா உன் கிட்ட நடந்திருக்கேன். அது……”
“ ப்ச்ச...சாரமில்லை…”
“இல்லை.. ஞான் முழுதும் சொல்லனும்… யூஷுவலா ஞான் இப்படி கிடையாது மானசி, பக்ஷே நீ என்ன பிடிக்கலேன்னு பரஞ்சிட்டில்ல, அதான் அப்படி ஒரு குரோதம். ஞான் மனுஷனாவே இருக்கல.. மானசி என்ன ஷமிக்கனும்…”
“அதுதான் நான் பரஞ்சிட்டில்ல, ஒன்னும் சாரமில்ல (ஒன்றும் பரவாயில்லை )..”
“ எனக்கு உன் மேல வளர பிரியம், பக்ஷே ஒனக்கு என் மேல பிரியமே இல்லை அதான் அப்படி நடந்துகிட்டேன்… நான் செய்ஞ்சது மனுஷத்தனமே இல்லை. உன்னை ஞான் நெருங்கி வர வர நீ ஒதிங்கி போனாய், அதான் ஞான் மிருகமாயிட்டேன். ஞான் ஒன்னும் என் செய்கையை நியாயபடுத்தலை கேட்டோ , இனிமே ஒரு முறை கூட அப்படி செய்ய மாட்டேன், ஐ ப்ரோமிஸ் யு மானசி!" என்று அவளை அனைத்துக் கொண்டு, கண்கள் கலங்க கூறினான், அவள் கணவன் மாதவன்.
"என்ட நாயர், எண்ணத்துக்காக்கும் இப்படி பெரிய விளக்கம் கொடுக்கறீர், ஞான் ஒண்ணுமே சொல்லலியே?" என்றாள் மானசா, அவன் கண்கள் கலங்குவதைக் கண்டு பயந்து போய்.
"ஆனா கண்டிப்பாக நீ ஏன் என்னை பிடிக்கலைன்னு சொன்ன? அதே சொல்லியே ஆகணும்? " என்று கேட்டான் அவள் கணவன்.
"அது வந்து.... நீங்க ஏன் அப்படி நடந்துக்கிட்டீங்க அதான் நான் அப்படி சொல்லவேண்டியதாச்சு