“அம்மே, எனக்கு பசி அம்மே…”
“”ஐயோ! ஒனக்கு ஆரும் ஒன்னும் கொடுக்கலியா? ராதே… ராதே...எவ்விட போனாய்?”
“ இவ்விட உண்டு அம்மே , (இங்கே தான் இருக்கேன் அம்மே)! இதோ சாப்பாடு கொண்டு வர போனேன்”
“சரி என்கிட்ட கொடு, நீ போ, ஒனக்கு ஜோலி இருக்கும், ஞான் என்ட மோளுக்கு போடறேன்… இல்ல மோளே?.”
வா ! என்ட மோளே!” என்று தன் மடியில் வைத்துக் கொண்டு சாப்பாட்டை ஊட்டி விட்டாள்.
இதை எல்லாம் கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தான் மாதவன்..
மானசி தன் குழந்தையுடன் பேசும் அழகை பார்த்து ரசித்துக் கொண்டிருந்தான் மாதவன், அவன் எப்போதும் குழந்தைகளுடன் இருந்ததே இல்லை, அவர்களை பார்ப்பது கூட கிடையாது, அவன் மனதில் மானசி தன்னை காதலிக்கவில்லை என்ற கோபத்தினால் தன் குழந்தைகளைக் பற்றி எண்ணியதில்லை. அவன் எப்போது வீட்டுக்கு வந்தாலும் மானசி பயத்திலேயே ஒடுங்கி, ஒதுங்கி இருப்பாள் அதுவே அவனை மிருகமாக்கிவிடும். அவளை காய படுத்திவிட்டு போய்விடுவான்.அதில் அவனும் மனதளவில் நிறைய காயப்பட்டு இருப்பான் ஆனால் இப்போதோ அவள் தானே வலிய வந்து அவனிடம் காதலோடு பேசவும், அவன் தன்னை மறந்து அவளை ஒரு வியப்புடன் பார்க்கிறான், அவளை முதல் முறை பார்ப்பது போல் இருந்தது அவனுக்கு, இப்போதுதான் தன் குழந்தைகளையும் பார்க்கிறான்...
"எந்த நோக்கிறது? இவ்விட வரு நாயர்!" என்று அவனை புன்னகையோடு அருகில் அழைத்தாள் மானசி. அவனும் சாவிக் கொடுத்த பொம்மை போல் அவள் அருகே சென்றான்.
"இவ்விட நோக்கு சஹானா, இதுதான் நிண்ட அச்சன் மாதவன் நாயர் கேட்டோ?" என்று கூறவும் அவன் அவளை ஒரு கையால் அணைத்து அவள் கன்னத்தில் முத்தம் கொடுத்து தன்