தொடர்கதை - வானவில்லாய் - 39 - ச.சிந்தியா
கயல்விழிக்கு வாழ்க்கை கொடுக்கும் அதிர்ச்சிகளும், ஆச்சர்யங்களும் புதிது கிடையாது. திருமண வாழ்க்கை தொடங்கி எத்தனையோ ரகமான இதயம் நொறுங்கும் அதிர்ச்சிகளை தாங்கி இருக்கிறாள். அதை தைரியமாக எதிர் கொள்ளவும் செய்திருக்கிறாள், அவற்றை தாண்டி வெற்றியும் பெற்றிருக்கிறாள்.
இப்போது நித்தேஷ் கொடுத்திருந்த இதய வலியையும் அதிர்ச்சியையும் கூட அதே இரும்பு மனதுடன் தாங்கினாள், எதிர்கொண்டாள். அத்தோடு, நித்தேஷின் திடீர் விடுப்பினால் அவள் எடுத்துக் கொள்ள வேண்டி இருந்த கூடுதல் பொறுப்பையும் திறமையாகவே கையாண்டாள், சிறப்பாக செயலாற்றினாள்.
ரவிராய் கூட அவளின் திறமையை மனதார பாராட்டினார். அந்த விதத்த
...
This story is now available on Chillzee KiMo.
...
டது உண்மையில் அவளுக்கு உதவி இருக்க வேண்டும். ஆனால், மாறாக, அவனின் இந்த திடீர் விடுப்பு அவளை அதிகமாக சோதனை செய்தது. தேவைக்கு அதிகமாக அவனை பற்றி யோசிக்க வைத்தது. இதய வலியை அதிகரித்தது!