(Reading time: 5 - 10 minutes)
Sirikkum Rangoli
Sirikkum Rangoli

  

அக்ஷரா செக்யூரிட்டி டிவைஸ் பட்டனை ஆப் செய்து கதவை திறந்தாள். ஆதித்யா அதை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தான்.

  

“வா ஆதி, போகலாம்!”

  

வெளியே இப்போதும் சூடாக இருந்தது. ஆயினும் மெல்லிய தென்றலும் வீசியது.

  

“உன் வீட்டுலேயும் இப்படி மிட்நைட் வாக் போவீயா?” ஆதித்யா அக்ஷ்ராவிடம் கேட்டான்.

  

“அங்கே இருக்கும் போது மிட்நைட் தாண்டி தான் வீட்டுக்கே போவேன். எனக்கு வீடு போக பிடிக்கவே பிடிக்காது.” அக்ஷரா முகத்தை அஷ்டக் கோணலாக்கி சொன்னாள்.

  

“அம்மா அப்பா உன்னை ஒன்னும் சொல்ல மாட்டாங்களா?

  

“அவங்களுக்கு நான் எப்போ வரேன்னு தெரிஞ்சா தானே கோபப் படுறதுக்கு?? கண்டுக்கவே மாட்டாங்க.”

  

“எனக்கு பொறாமையா இருக்கு அக்ஷரா. உன்னை மாதிரியான கேர்ப்ரீ குடும்பம் எனக்கும் கிடைச்சிருக்கலாம். எங்க வீட்டுல எப்போ பாரு வேலைக்கு போ, சம்பாதி, அக்காவை பார்த்துக்கோ அது இதுன்னு கட்டளை போட்டு கடுப்பாக்குவாங்க. ஏன் இவ்வளவு லேட்டா வர, எதுக்கு இவ்வளவு லேட்டா எழுந்துக்குற, இப்படி கேள்வி மேல கேள்வி கேட்டு உயிரை எடுப்பாங்க!”

  

அக்ஷரா அமைதியாக இருந்தாள்.

  

“என்ன அக்ஷரா அமைதியா இருக்க?”

  

“எனக்கு உன்னை மாதிரி ஒரு குடும்பம் கிடைக்கலையேன்னு ஆதங்கமா இருக்கு. நான் நியூயார்க் வந்ததுக் கூட என் அப்பாக்கு லேட்டா தான் தெரியும். உனக்கு பார் உன் அக்கா

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.