உன் கனவு நனவாகும் போது கட்டாயம் அவங்களும் சந்தோஷப்படுவாங்க. அது வரைக்கும் பல்லை கடிச்சுட்டு இரு.”
“என் அக்கா மாதிரியே பேசுற அக்ஷரா. அதெப்படி எல்லா பொண்ணுங்களும் ஒரே மாதிரி பேசுறீங்க?”
“எனக்குத் தெரியாது. ஆனால் எல்லா பசங்களும் ஒரே மாதிரின்னு நான் சொல்ல மாட்டேன். அதுவும் உன்னைப் பார்த்த பிறகு கிடையவே கிடையாது.”
ஆதித்யா சிரித்துக் கொண்டே, “தாங்க்ஸ் அக்ஷரா! எப்போவும் எதுக்கு இப்படியே சொல்ற?” என்றான்.
“அப்படி தான் ஆதி. நான் என் அப்பா பத்தி சொன்னேன்ல. அவருடையது நிறைய வேலைங்க ஷேடி டீல்ஸ். அவர் பிஸ்னஸ் எப்படி பட்டதுன்னு என் ஊருல எல்லோருக்கும் தெரியும். அவரை யாரும் ஒன்னும் சொல்ல மாட்டாங்க, என்னை தான் இன்டைரக்ட்டா சீண்டுவாங்க. சில பேர் கிண்டலா சொல்வாங்க, சில பேர் சக்கரை தடவி வார்த்தையால குத்துவாங்க. மிஸ்பீகேவ் செய்வாங்க.”
“மிஸ்பீகேவ் செய்வாங்களா?”
ஆதித்யா அதிர்ச்சியுடன் கேட்க, அக்ஷரா சிரித்தாள்.
“என் அப்பாக்கு எதிக்ஸ் இல்லை, அதனால எனக்கும் எதிலேயும் இருக்காதுன்னு நினைக்குறாங்க. இவ்வளவு வருஷத்துல இந்த அளவுக்கு மனசு விட்டு பேசக் கூட எனக்கு ஒரு பிரென்ட் இல்லை ஆதி. உன் கிட்ட தான் இவ்வளவு சொல்லி இருக்கேன்.”
“எனக்கும் அப்படி தான் அக்ஷரா. காஷ்யாப் நல்ல பிரென்டுன்னு நம்பினேன். அவன் என்னை யூஸ் செய்துட்டு இருந்திருக்கான்னு இந்த காம்பெடிஷன் வந்தப்புறம் தான் தெரிஞ்சது. இந்த காம்படிஷன் தான் என்னுடைய ஒரே வாய்ப்பு. இதுல நான் ஜெயிக்கலைனா நானும் பல கோடில ஒருத்தனா கூட்டத்துல கரைஞ்சு காணாம போயிடுவேன்.”