தொடர்கதை - என் மேல் ஆசை இல்லையா? - 42 - நவ்யா
காருண்யா வந்ததும் தர்மா முதல் ஆளாக எழுந்து நின்றான். ஜனனியே அதற்குப் பிறகு தான் எழுந்திருக்க வேண்டுமா என்று யோசிக்கவே செய்தாள்.
அந்த யோசனைக்கு அவசியம் ஏற்படாது காருண்யா ஜனனி பக்கத்தில் அமர்ந்தாள்.
"தேங்க்ஸ் ஜனனி," என காருண்யா ஜனனியிடம் சொல்ல, தர்மா காருண்யாவைப் பார்த்துக் கொண்டே நின்றான்.
ஜனனிக்கு அவர்கள் இருவர் நடுவே இருப்பது கொஞ்சம் தர்மசங்கடத்தைக் கொடுத்தது. அவள் கன்சலடன்ட் எனும் முறையில் சில பல சண்டைகளைப் பார்த்திருக்கிறாள், சமாதானப் படுத்தி இருக்கிறாள். எதிலும் அவளுக்கு தனிப்பட்ட முறையில் ஈடுப்பாடு இருந்தது கிடையாது என்பதால் அதில் ஏற்படும் பேச்சுக்கள், செய்கைகள், மிரட்டல்கள் என எதற்குமே அவ
...
This story is now available on Chillzee KiMo.
...
ுடியவில்லை.
காருண்யா ஜனனியை பார்த்துக் கொண்டே, "எல்லோரும் உட்காரலாமே," என்றாள்.
அது தர்மாவிற்கான செய்தி என்பது உணர்ந்து ஜனனி தர்மாவை நோக்கினாள்.
அவனைப் பார்த்தால் அவனுக்கும் புரிந்ததாக தான் தோன்றியது. ஆனாலும் உட்காராமல் நின்றுக் கொண்டே இருந்தான். அவனின் பார்வை காருண்யாவிடம் போவதும் ஜனனியிடம் வருவதுமாக இருந்தது.