சொல்லனும்னா முன்னாடி அந்த கல்யாணத்துக்கு நான் சம்மதிச்சதுக்கு, அந்த ஷேர்ஸ் ஒரு காரணம்.. கல்யாணம் செஞ்சுக்க என்ன ஒரு தப்பான காரணம்... நல்ல வேளை அந்தக் கல்யாணம் நடக்கலை...." என்று பெருமூச்சு விட்டாள் இந்து.
"ஆனால், உனக்கு எதுக்கு அந்த ஷேர்ஸ்?" என்று கேட்டாள் வீணா.
இந்துவை ஓர் பார்வை பார்த்து விட்டு, கீதா இதற்கு பதில் சொன்னாள்.
"அந்த ரகசியம் உனக்கு தெரியாதா, வீணா? இப்போ ஆன்ட்டி கிட்ட தான் 50% ஷேர்ஸ் இருக்கு. அதனால இப்போ இந்து கம்பனிய பார்த்துக்கிட்டாலும் ஆன்ட்டிய கேட்க்காமல் நம்ம மேடம் எந்த முடிவும் எடுக்கக் கூடாது.. நம்ம இந்துக்கு அது சரிப் பட்டு வருமா? சொல்லு...."
"ஓ! ஆனால் மேற்பார்வை பார்க்க ஆன்ட்டி இருக்கிறது நல்லது தானே, இந்து..."
வீணாவிற்கு பதில் சொல்லாமல் புன்னகைத்தாள் இந்து.
"அம்மாவை பொறுத்த வரை நான் இன்னும் சின்னக் குழந்தை... ஒவ்வொரு விஷயத்துக்கும் ஆயிரம் கேள்வி கேப்பாங்க... அப்பா இருந்தப்போ இப்படி இல்லை ரொம்ப ஃப்ரீயா விடுவார். அதனால தான் அப்போ அப்படி ஒரு தப்பான முடிவு எடுத்தேன். நல்ல வேலை அந்த கல்யாணம் நடக்கலை. இல்லையென்றால் சேகர் அத்தான் ரொம்ப கஷ்டப் பட்டிருப்பார்!!!"
"ஒரு வேளை ஆன்ட்டியும் அதே தான் நினைச்சு நந்தினிக்கு சப்போர்ட் பண்றாங்களோ என்னவோ..." என்றாள் கீதா.
"நந்தினி எப்படியோ போகட்டும் க்கா... நாம நம்ம கதைய பார்ப்போம்... இந்துவும் சஞ்சீவும் நல்ல ஜோடி கீதா க்கா... அந்த ரூம்ல அவங்களை ஒன்னா பார்த்தப்போ எனக்கு இது தான் ஃபர்ஸ்ட் மைன்ட்ல ஓடிச்சு..."
"வேண்டாம் வீணா, அக்காவை குழப்பாதே... அவங்களே இப்போ தான் அந்த வீட்டில செட்டில் ஆகி இருக்காங்க..."