அண்ணி திட்டுவா. நீயும் போயும் தூங்கு... குட் நைட் டா..."
ராஜீவ் சென்றபின் சிறிது நேரம் அங்கேயே நின்ற சஞ்சீவ், பின் விளக்கை அணைத்து விட்டு, தன் அறையில் வந்து படுத்தான்.
இந்து இப்போது என்ன செய்து கொண்டிருப்பாள்?
அவனின் மனசுக்குள் ஒரு புதுக் கேள்வி வந்து சேர்ந்துக் கொண்டது.
**********
கிட்டத் தட்ட அதே நேரத்தில், தன் அம்மாவிடம் அன்று நடந்த எல்லா கதையையும் சொல்லி விட்டு தூங்க வந்தாள் இந்து. சஞ்சீவிடம் யாரென்று கேட்காமல் டெக்கரேஷன் பற்றி பேசியதை மட்டும் அமமாவிடம் சொன்னாள்.
அம்மாவிடம் பேசி முடிக்க நேரமாகி விட்டதால், அன்று வழக்கம் போல் புத்தகம் எதுவும் படிக்காமல், மொபைலை பார்க்காமல், தூங்குவது என்று முடிவு செய்து விளக்கை அணைத்து விட்டுப் படுத்தாள். தூக்கம் கண்களை சொக்கியது.
ஏனோ, சம்பந்தமே இல்லாது சஞ்சீவின் முகம் அவளின் நினைவில் வந்தது... இவன் நினைவு ஏன் இப்போது வருகிறது என்று யோசித்தவள்... பதில் கிடைக்கும் முன்னே தூங்கிப் போனாள்.
தொடரும்...