அடுத்த ஒரு மணி நேரத்தில் சுவாதி திருமதி சுவாதி விஷாகனாக அந்த வீட்டை விட்டு கிளம்ப தயாராகி இருந்தாள்...
அவள் காரில் ஏறி அமரவும், சேகர் விஷாகனின் கைகளை பற்றிக் கொண்டார்.
“என்ன சொல்றதுனே எனக்கு தெரியலை விஷாகன்! சுவாதி லக்கி அது மட்டும் எனக்கு புரியுது.... அவளோட குறையை பெரிசு செய்யாமல்.....”
”குறையா? எதை சொல்றீங்க?”
“அப்பப்போ இப்படி மயக்கம் போடுறது, பயப்படுறதை தான் சொல்றேன்... அவ சின்ன வயசில இருந்தே ரொம்ப வீக் தான் விஷாகன்... அண்ணி இருந்தப்போ அவளை சரியா விளையாட கூட அனுப்ப மாட்டாங்க...”
“ப்ச்.... இதெல்லாம் ஒரு குறையா? அதை எல்லாம் நான் பார்த்துக்குறேன்.... நீங்க கவலைபடாதீங்க....” என்றவன், அவரின் மனைவியை குறிப்பாக பார்த்தபடி,
“இனிமேல் சுவாதி இங்கே எப்போ வருவான்னு என்னால சொல்ல முடியலை.... நீங்க தப்பா நினைச்சுக்காதீங்க” என்றான்.
“சுவாதி எங்கே இருந்தாலும் சந்தோஷமா இருந்தா எனக்கு சந்தோஷமே... நல்லா இருங்க...” என மனமார வாழ்த்தினார் சேகர்.
கண்கள் கலங்க சித்தப்பா, நிர்மலா, பாராமுகமாக இருந்த சித்தி என மூவரிடமும் விடை பெற்று கிளம்பினாள் சுவாதி...
காரில் சிறிது தூரம் சென்ற பின்பும் இருவரும் அமைதியாகவே இருந்தார்கள்...
ஒன்றன் பின் ஒன்றாக நடந்த நிகழ்வுகள் மற்றும் மயங்கி விழுந்ததாலும் சுவாதியின் முகமே சோர்ந்து போயிருந்தது...
Bindu Vinod has written more than 31 Tamil series in Chillzee and many more Novels in Chillzee KiMo.
Copyright © 2009 - 2023 Chillzee.in. All Rights Reserved.