நந்தினி யோசித்துக் கொண்டிருக்க, எஸ்.கே தன் பேச்சை தொடர்ந்தான்...
“ஷெரீஃப் ஆஃபிஸ்ல உன்னைப் பார்த்தப்போ... ஐ டோன்ட் நோ ஹவ் டு எக்ஸ்ப்ரஸ் இட். பட் உன்னைப் பார்த்து சாதாரணமா பேச முடியலை. அப்புறம் நடந்தது எல்லாமே அப்படித் தான். நந்தினிக்கு கஷ்டம், கல்யாணம் செய்துக்கனும், அவ்வளவு தான் நான் யோசிக்கக் கூட இல்லை. உடனே சரின்னு சொன்னேன்”
“.....”
“அன்னைக்கு நம்ம கல்யாணம் நடந்த அன்னைக்கு... அந்த ஜமைக்கா ட்ரிப் கூட நான் உன் கிட்ட இருந்து எஸ்கேப் ஆக செய்த முயற்சி தான். உன் முன்னாடி நான் தோத்து போயிட்டே இருந்தேன். நீ என்னை முழுசா ஜெயிச்சுட்ட. அதை உன்கிட்ட சொல்லவோ, உண்மைன்னு ஒத்துக்கவோ என்னால முடியலை. ஏன் எனக்கு உன்னைப் பிடிச்சது... என்ன ஏதுன்னு எல்லாம் எனக்குத் தெரியலை. பட் யூ ஆர் ஒன் ஆஃப் அ கைண்ட் நான்ட்ஸ். உன்னைப் போல ஒருத்திக்கு நான் ஒரு நல்ல மேட்ச் தானான்னு ஒரே குழப்பம்”
நந்தினி திகைத்துப் போய் நின்றிருந்தாள்.
“எனக்காக நீ அனாமிகாவை பார்த்துக்கிட்டது, பார்த்து பார்த்துச் சமைத்தது எல்லாமே எனக்குப் புரிந்தது. ரொம்பவே பிடிக்கவும் செய்தது. ஆனால் கல்யாணம் எனும் ஒன்னு எனக்கு சரி படாதுன்னு தோணிச்சு. என் அம்மா அப்பாவோட பேட் இன்ப்ளுயன்ஸ் பத்தி உனக்கும் தெரியுமே. கல்யாண வாழ்க்கைக்கு நான் சூட் ஆனவன் இல்லைன்னு எனக்குள் ஒரு எண்ணம். நான் உனக்கு ஒரு நல்ல ஹஸ்பண்டா இருக்க மாட்டேனோன்னு தயக்கம். பட் அது எத்தனை தப்பான முடிவுன்னு அன்னைக்கு கடையில பில் கூட சிரிச்சு பேசி நீ கை குலுக்குன பாரு அப்போ தெரிஞ்சு போச்சு”
“...”
“ஐ லவ் யூ ஸோ மச் நந்தினி. என் காதல் இதுபோல அது போலன்னு சொல்லவோ விவரிக்கவோ முடியாத அளவுக்கு உன்னை நான் லவ் செய்றேன். என் அம்மா அப்பாவைப்
Bindu Vinod has written more than 31 Tamil series in Chillzee and many more Novels in Chillzee KiMo.
Copyright © 2009 - 2023 Chillzee.in. All Rights Reserved.