கொடைக்கானல் அங்கிதாவின் கெஸ்ட் அவுஸ்
காலையில் உறக்கம் கலைந்து கண் விழித்தான் ஜெகவீரன். பார்வை மங்கலாகத் தெரியவும் தன்னுடைய ஒரு கையை எடுக்க முயற்சி செய்ய முடியாமல் குழம்பினான். சரி மற்றொரு கையை எடுக்கலாம் என நினைத்து அதுவும் எங்கோ கட்டுப்போட்டு இருப்பதாக உணர்ந்தவனுக்கு சந்தேகமே வந்தது. நெஞ்சில் வேறு கனம் இருப்பதை கண்டு கண்கள் மூடியும் திறந்தும் தலையை இருபுறமும் அசைத்தும் ஒருவழியாக தூக்க கலக்கத்தை ஓட்டியவன் தலையை மட்டும் தூக்கிப் பார்த்தான்.
தன்மேல் படுத்திருந்த பெண்ணை கண்டதும் பக்கென்றது. முகம் தெரியாமல் தலைமுடி மட்டும் தெரியவே பயந்தான்.
”யாருன்னு தெரியலையே ஒருவேளை அனுபமாவா இல்லை அங்கிதாவா எப்படி தெரிஞ்சிக்கறது” என நினைத்தவன் தன் உடலை ஒருபக்கமாக வளைத்து தன் கைகளை அவளிடமிருந்து எடுத்துக் கொண்டு அவளை பக்கத்தில் படுக்க வைத்து எழுந்து அமர்ந்தான். அங்கிதாதான்
”இவள் என்ன செய்றா என்கிட்ட” என யோசித்துக் கொண்டே தன்னை ஒரு முறை பார்த்து அதிர்ந்தான்.
”அய்யோ என் வேட்டி, என் சட்டை எங்க போச்சி” என சுற்றி முற்றி பார்த்தான். ஓரிடத்தில் ரெண்டும் இருக்கவே திரும்பி அவளை பார்த்தான் கோபமாக
”பாவி என்னடி செஞ்ச என்னை” என கத்திவிட்டு அவளை உலுக்கி எழுப்பலானான். அவளோ
”ம் ம்ஹூம்” என முனகவும் அதிர்ந்தான்
”என்னடி ம்ஹூம், எழுடி முதல்ல என்னடி செஞ்ச என்னை, பாவி மகளே உன்னை நம்பி இவ்ளோ தூரம் வந்ததுக்கு நீ பண்ற காரியமா இது எழு எழு” என அவளது கையை பிடித்து இழுத்து அவளது தோளை உலுக்கி எழுப்பி அமர வைத்தான். அவளோ தூக்க கலக்கத்தில்
Sasirekha has written more than 33 Tamil series in Chillzee and many more Novels in Chillzee KiMo.
Copyright © 2009 - 2023 Chillzee.in. All Rights Reserved.