“உங்களுக்கு தோள் கொடுத்து தூக்கி விட்டவர் ஸ்ரேயான்ஷ்!!! வாவ்!!! சரி, உங்களுக்கு ஸ்ரேயான்ஷை எப்படி தெரியும் அபி???”
தீபாவின் கேள்வி சொல்லாமல் சொன்ன உண்மையின் தாக்கத்தில் அபினவ் ஒரு வினாடி அமைதியானான்...
ஆனால் தீபா அவனை அப்படியே விட்டு விடும் மனநிலையில் இல்லை...
“என்ன பேசாம நிக்குறீங்க??? யாரு உங்களுக்கு ஸ்ரேயான்ஷை அறிமுகப் படுத்தினதுன்னு ஞாபகம் இல்லையா??? பரவாயில்லை, நானே சொல்றேன்! உங்களுக்கு ஸ்ரேயான்ஷை அறிமுகப் படுத்தினது என் பிரெண்ட் ரச்னா!”
தோழி மற்றும் ரச்னாவில் நல்ல அழுத்தம் கொடுத்து சொன்னாள் தீபா!
அபினவ் ஏதோ சொல்ல முயன்றான் ஆனால் அவனை முந்திக் கொண்டாள் தீபா,
“ஸ்ரேயான்ஷ் அது செய்தார், இது செய்தார்! உங்களுக்கு ஹெல்ப் செய்தார், வேலை கொடுத்தார்...! ஹப்பபப்பா எவ்வளவு பெரிய லிஸ்ட்... ஆனால் ரச்னா சொல்லி இல்லைனா அவர் ஒரு மண்ணும் செய்திருக்க மாட்டார்... உங்க ரெஸ்யூமேவை திறந்துக் கூட பார்த்திருக்க மாட்டார்... அவளால் கிடைச்ச வேலையில இருந்துட்டு கூசாம அவளையே என்ன எல்லாம் சொல்றீங்க??? அவளா செல்ஃபிஷ்??? சுயநலத்தோட மொத்த உருவமே நீங்க தான்... உங்களுக்கு யாராலே அதிக பலன் கிடைக்குதோ அவர் பக்கமா சாயுற சுயநலவாதி... உ”
கோபம் தலைக்கேற மூச்சுவிடாமல் பேசிக் கொண்டே சென்ற தீபாவின் பேச்சு, அபினவ் அவளின் கன்னத்தில் அறைந்த அறையில் பட்டென்று நின்றது!
சுள்ளென்று எரிந்த கன்னத்தை தடவிய படி நம்பவே முடியாமல் கணவனை பார்த்தாள் தீபா!!!
அவனால் அவளின் பார்வையை எதிர்கொள்ள முடியவில்லை...
Bindu Vinod has written more than 31 Tamil series in Chillzee and many more Novels in Chillzee KiMo.
Copyright © 2009 - 2023 Chillzee.in. All Rights Reserved.