அன்று ஒரு புதன் கிழமை...
விஷாகன் ஆபிஸ் கிளம்பி சென்றிருக்க, பொறுமையாக தலைக்கு குளித்து, கண்ணாடி முன் நின்று தன்னுடைய நீண்ட கூந்தலை பொறுமையாக கைகளால் அலைந்து... மெல்ல ஓரத்தில் இருந்த சிக்கை எடுத்துக் கொண்டிருந்தாள் சுவாதி...
பொதுவாக ஹேர் ட்ரையர் பயன்படுத்துபவள் இல்லை என்பதால், அந்த அறையில் இருந்த சின்ன டேபிள் ஃபேனை அவள் பின்னே விட்டிருந்த ஈரம் சொட்டும் கூந்தலில் படும் படி வைத்திருந்தாள்...
முன் தினம் விஷாகனுக்கு பிடிக்காது என்று தெரியாமல் பாகற்காய் சமைத்ததும்... அதற்கு அவன் சிணுங்கல் + கொஞ்சல்ஸ் என செல்லம் கொஞ்சிய படி ஆனால் மறுக்காமல் சாப்பிட்டதையும் நினைத்து அவளுக்கு சிரிப்பு வந்தது...
இப்போது எல்லாம் அவளுக்கு பழக்கமாகிக் கொண்டிருக்கும் கணவனின் அந்த மென்மையான முகத்தை பற்றி யோசித்த படி அவள் நிற்க... திடீரென கதவை திறந்துக் கொண்டு உள்ளே வந்தான் விஷாகன்...
“முக்கியமான இன்சுரன்ஸ் பேப்பர் எடுக்க மறந்துட்டேன் சுவாதி...” என்று பேச்சை தொடங்கியவன், அதை முடிக்காமல், முடிக்கும் எண்ணமும் இல்லாமல் நின்றான்...
காரணம் வேறு யார்? அவனின் மனைவியே தான்...!
கதவு திறக்கும் சத்தம் கேட்ட போதே திரும்பிய சுவாதி, விஷாகன் பார்வையில் படவும் இன்ப அதிர்ச்சியில் ஒரு வினாடி தன்னையும், பக்கத்தில் இருந்த ஃபேனையும் மறந்து போனாள்.
அவசரமாக திரும்பியவளின் மீது வேகமாக ஓடிக் கொண்டிருந்த ஃபேன் காற்று பட, பின் குத்தாமல் ஃப்ரீயாக அவள் விட்டிருந்த சேலை அதன் பாட்டிற்கு ஃப்ரீயாக பறந்தது....!
முதலில் எதிர்பாராமல் நடந்த ‘சேலை விபத்தில்’ திகைத்தாலும், உடனேயே சமாளித்துக்
Bindu Vinod has written more than 31 Tamil series in Chillzee and many more Novels in Chillzee KiMo.
Copyright © 2009 - 2023 Chillzee.in. All Rights Reserved.