This is a Chillzee Originals episode. Visit Chillzee originals page for other Chillzee original stories.
“டிரஸ் எப்படி சுந்தரி? டாப் நாட்ச் செலெக்ஷன்?” – இனியவன்.
சுந்தரி வாயை மூடிக் கொண்டாள். அவள் நினைப்பதை சொன்னால் இனியவன் என்ன சொல்வானோ?
பச்சை கலரில் முழு உயரத்திற்கு இருந்தது அந்த உடை. அதில் மேல் பகுதியில் ஒரு ஆழமான கட், அதேப்போல் கால் பகுதியின் ஒரு பக்கத்திலும் நீளமாக கட் இருந்தது!
சுந்தரி சினிமாவில் பார்த்திருக்கும் உடைகளில் கூட இவ்வளவு நீளமான கட் இருக்குமா என்று தெரியவில்லை.
“பார்த்தீயா உன்னாலேயே பேச முடியலை. இதை போட்டுட்டு நீ வந்தேன்னு வை உன்னை பார்த்து எல்லோரும் அசந்துப் போயிடுவாங்க.”
அந்த உடையை தொட்டுப் பார்க்க கூட சுந்தரிக்கு பிடிக்கவில்லை. அதற்காக அதை அப்படியே இனியவனிடம் சொல்லவும் அவளுக்கு மனம் வரவில்லை. அவசரமாக யோசித்தாள்.
“என்ன இப்படி செய்திருக்கீங்க?” – சுந்தரி
“என்ன மோகினி இப்படி கேட்குற?”
“எனக்கு பச்சை கலர் பிடிக்கவே பிடிக்காது”
“எப்போ இருந்து? நிறைய பச்சை கலர் புடவை வச்சிருக்கியே?”
“அதெல்லாம் நான் வாங்கினது இல்லை. யாராவது வாங்கிக் கொடுத்தது. பிடிக்கும் பிடிக்காதுன்னு நான் எதுவும் சொல்ல முடியாது. முதல் முறையா உங்க கிட்ட சொல்றேன்”
“உனக்கு பிடிக்கலைனா வேண்டாம் சுந்தரி. நான் ஆசையா வாங்கிட்டு வந்தேன். ரிட்டர்னும் செய்ய முடியாது.”
Copyright © 2009 - 2023 Chillzee.in. All Rights Reserved.