This is a Chillzee Originals episode. Visit Chillzee originals page for other Chillzee original stories.
சுந்தரிக்கு நினைவு வந்தப் போது இனியவனின் இறுக்கமான அணைப்பில் இருந்தாள். அந்த அணைப்பின் சுகத்தை இழக்க மனம் வராமல் அப்படியே இன்னும் சில வினாடிகள் இருந்தாள்.
பின், மெல்ல கண்களை திறந்தால், அறையில் நல்ல வெளிச்சம் இருந்தது. காலை 9 மணி என்று காட்டிய கடிகாரம் விடிந்து விட்டதை சொல்லவும் அதிர்ந்துப் போய் இனியவனை மெதுவாக விலக்கி விட்டு எழுந்தாள்.
இரவு சாப்பிடக் கூட போகவில்லையே. மாமாவும், மாமியும் என்ன நினைத்து கொண்டிருப்பார்கள்? அவர்கள் முகத்தை எப்படி பார்ப்பது? வெட்கமும், கவலையும் கலந்துப் போட்டிப் போட குளியலறை நோக்கி சென்றாள்.
“சுந்தரி, இனியவனும் எழுந்துட்டானா? இரண்டு பேரும் சாப்பிடுங்க” – ஜெயஸ்ரீ எதுவுமே நடக்காதது போல சொன்னாலும் சுந்தரிக்கு சங்கடமாக இருந்தது.
“அது--- மாமி--- அத்தை--- நான் ---- நாங்க --- ” – சுந்தரி உளறிக் கொட்டுவதை ரசிப்பதுப் போல பார்த்துக் கொண்டிருந்த ஜெயஸ்ரீக்கே பாவம் என்று தோன்றியது.
“நான் உன் கிட்ட எதையும் கேட்கலை, சுந்தரி. போ, போய் அவனையும் எழுப்பி விடு. இரண்டுப் பேருமா சாப்பிடுங்க. சப்பாத்தி, குருமா எல்லாம் டேபிள்ல இருக்கு.”
சுந்தரிக்கு அப்போது தான் இயல்பாக மூச்சே விட முடிந்தது.
ஊரில் ஒரே ஒரு நாள் லேட்டாக தூங்கி எழுந்து, அதற்காக ஒரு வாரம் திட்டு வாங்கிக் கட்டிக் கொண்டது ஞாபகம் வந்தது.
அவளுடைய வாழ்க்கை மாறி தான் இருக்கிறது! மீண்டும் தலை கீழாக மாறாமல் இருந்தால் சரி தான்!
மனம் முழுக்க உல்லாசம் பொங்க இனியவனை எழுப்பினாள்.
Copyright © 2009 - 2023 Chillzee.in. All Rights Reserved.