தஞ்சாவூர்
நெற்களஞ்சியமான தஞ்சைக்குள் காரை ஓட்டிக் கொண்டு வந்தான் ஜெகவீரன். அவனது பக்கத்தில் இருந்த அங்கிதாவோ வரும் வழியெல்லாம் வேடிக்கை பார்க்கலானாள்.
”ஓய் என்ன பண்ற”
“இந்த விவசாய நிலங்களை பார்க்கறேன், பசுமையா இருக்கு இதைப் பார்த்தாலே மனசு குளிருது” என அவள் சொல்ல அவனும் வண்டியை ஓரம் கட்டி நிறுத்தினான். அவளும் இப்போது ஜன்னலை திறந்து விட்டு பசுமையான நெல் பயிரின் சுவாசத்தை முகர்ந்துக் கொண்டு அந்த அழகை ரசித்துக் கொண்டிருந்தாள்.
அவர்கள் வருவதற்குள் மதியம் ஆகிவிட்டது. என்பதால் விவசாய நிலத்தில் ஆட்கள் நடமாட்டம் குறைந்திருந்தது.
அங்கிதா வெளியே வேடிக்கை பார்க்க அவள் பின்னாடி நெருக்கி அமர்ந்தான் ஜெகவீரன்
”என்ன செய்றீங்க இடம் இல்லை”
“ஷ் முன்னாடி வேடிக்கை பாரு” என சொல்ல அவளும் தலையை வெளியே நீட்டி இயற்கை காற்றையும் வாசனையும் ரசித்துக் கொண்டிருந்தாள். ஜெகவீரனோ அவளது கழுத்தில் முகம் வைத்து நெற்கதிர்களைப் பார்த்துக் கொண்டிருந்தான்.
”அங்கிதா”
“ம்”
“இதுப்போலதான் என்னோட நிலமும் இருக்கும்”
“அப்படியா”
Sasirekha has written more than 33 Tamil series in Chillzee and many more Novels in Chillzee KiMo.
Copyright © 2009 - 2023 Chillzee.in. All Rights Reserved.