Page 6 of 6
பணம்! இதை எப்படி அவள் மறந்துப் போனாள்???!!! அதைப் பற்றி அவள் சிந்திக்கவே இல்லையே...
மனதுள் அந்த எண்ணம் ஓடினாலும், அப்படியே மறைந்து நின்று ஒட்டுக் கேட்க விருப்பமில்லாமல், கற்பகத்தின் அருகில் சென்று, பார்க்கிங் ஸ்லிப் பற்றி சொன்னாள்.
"ஆமாம், என் கிட்ட தான் இருக்கு..." என்ற கற்பகம், தன் உறவுப் பெண்மணியிடம்,
"சரி மாலா, நான் கிளம்புறேன்... நாங்க வந்து பத்திரிக்கை கொடுப்போம், மறக்காமல் குடும்பத்தோடு வரணும் சரியா?" என்றாள்!
"நீங்க சொல்லனுமா அக்கா...! சரி நான் வரேன்... வரேன்மா..." என்று சொல்லி சென்றாள் அந்த பெண்மணி.
'பணம்' பற்றி யோசித்துக் கொண்டே கற்பகத்துடன் நடந்தாள் பாரதி.
தொடரும்...