This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.
அரை மணி நேரம் ஓடி செல்ல, இனியவன், மொபைலை வைத்து விட்டு சுந்தரி பக்கம் ஓடி வந்தான்.
“சாரி மோகினி. நவ்யாக்கு ஹெல்ப் செய்ய வேண்டி இருந்துச்சு.”
சுந்தரி விழித்து தான் இருந்தாள். இருந்தாலும் கண்களை மூடிக் கொண்டு தூங்குவதுப் போல நடித்தாள்.
“மோகினி!” இனியவனின் அழைப்பில் ஏமாற்றம் தெளிவாக தெரிந்தது.
அப்போதும் சுந்தரி அசையவில்லை.
பெருமூச்சுடன், விளக்கை அணைத்து விட்டு படுத்தான் இனியவன். சுந்தரியை அணைத்துக் கொண்டே சில நிமிடங்களில் தூங்கிப் போனான்.
சுந்தரி தூங்காமல் கொட்ட கொட்ட முழித்திருந்தாள். இனியவனுடைய குரலில் இருந்த ஏமாற்றத்திற்கான காரணம் சுந்தரிக்கு புரிந்தது. அவ்வளவு ஆசை இருந்தும் தூங்கி விட்டாள் என்று தொடர்ந்து தொல்லை செய்யாமல் அமைதியாக தூங்குகிறாரே! இனியவன் மீதான அன்பும், காதலும் அதிகமாக அவனுடைய நெற்றியை மென்மையாக வருடி விட்டாள்.
யார் இந்த நவ்யா??? எதனால் அவளுடைய பெயரைக் கேட்டாலே எரிச்சலாக வருகிறது??? இனியவனை பாதுக்காத்துக் கொள்ள விரும்புபவளைப் போல அவனை தன்னோடு சேர்த்து இறுக அணைத்துக் கொண்டாள் சுந்தரி. தூக்கம் தான் வர மாட்டேன் என்றது!
*****
“சரி நவ்யா.”
“----“
Copyright © 2009 - 2023 Chillzee.in. All Rights Reserved.