மறுநாள் பொழுது விடிந்தது, சர்வீஸ்க்கு விடப்பட்டிருந்த ஜீவிதாவின் காரும் வீடு வந்து சேர்ந்தது. பூபதி வந்த விசயம் அறிந்ததும் அசோக்கிற்கும் பொன்னுசாமிக்கும் வெறுப்பாக இருந்தது, இவன் ஏன் திரும்பி வந்தான் என நினைத்து இருவருமே கொதித்துப் போனார்கள் ஆனால், பூபதியோ எதையோ பறிகொடுத்தது போல உலாவ ஜீவிதாவோ உற்சாகமாக அலைந்துக் கொண்டிருந்தாள். இருவரின் போக்கில் தெரிந்த மாற்றத்தை வைத்து அசோக்கால் எதையுமே கணிக்க இயலவில்லை.
காலை டிபன் முடிந்த உடன் ஜீவிதாவிடம் வந்தான் அசோக், ஜீவிதாவோ அசோக் வரவும் சற்று அச்சமுற்றாள் அந்நேரம் எங்கிருந்தோ வந்து அவள் பக்கத்தில் நின்றான் பூபதி, அவன் வரவும் தைரியமானாள் ஜீவிதா. அசோக் பூபதியை பார்த்து முறைத்தான், பூபதியோ நொந்தே போனான்.
ஜீவிதாவோ
”என்ன விசயம் அசோக், எதுக்காக வந்திருக்க”
”எஸ்டேட் கணக்கு வழக்குகளை பார்த்துட்டேன், அதை காட்டலாம்னு”
”இதை அப்படியே அப்பாவுக்கு கொரியர் அனுப்பிடுங்க, அங்க இருக்கற அக்கவுண்ட் மேனேஜர் ரீசெக் பண்ணிட்டு செக் அனுப்புவாரு”
”செக்கா”
”ஆமாம் கணக்கு வழக்குகளை நாம சரியா அனுப்பிட்டா போதும், அவங்க செக் அனுப்புவாங்க, அதை பணமாக்கிட்டு இங்கிருக்கறவங்களுக்கு சம்பளம் தரனும்”
“ஓஹோ அப்படியா ஆனா இது சுத்துவழியா இருக்கே”
”வேணும்னா நீங்களே நேரா சென்னைக்கு போய் பார்த்துட்டு வாங்களேன், இந்த ப்ராசஸ் எப்படி நடக்குதுன்னு தெரிஞ்சிப்பீங்க”
Sasirekha has written more than 33 Tamil series in Chillzee and many more Novels in Chillzee KiMo.
Copyright © 2009 - 2023 Chillzee.in. All Rights Reserved.