This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.
சுந்தரி அமைதியாக இருக்கவே, “உங்க ரிசப்ஷனுக்கு வேண்டியது எல்லாம் வாங்கனும், சுந்தரி. இனியா எங்கேயோ போறானே, நாம கடைக்கு போகலாமா?” என பேச்சை மாற்றினாள் ஜெயஸ்ரீ.
“அவரு இல்லாம் நாம மட்டும் வாங்கினா அவருக்கு பிடிக்குமோ என்னவோ?” என்றாள் சுந்தரி தயக்கத்துடன்.
மகனுடைய கருத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கும் மருமகளை மெச்சிக் கொண்டாள் ஜெயஸ்ரீ.
“சரி, அவனும் வரட்டும் எல்லோருமா சேர்ந்தே போகலாம். அவன் கோபப் பட்டு பேசாம இருந்தெல்லாம் நான் பார்த்ததே இல்லை. நேத்து நான் பேசும் போது உன் மாமாவும் வந்து அவனை கேட்பார்ன்னு நான் யோசிக்கலை. இரண்டுப் பேருமா கேட்டோம்னு அவனுக்கு கோபம் வந்திருக்கும்.”
“இருக்கும் மாமி!” என்று சொன்ன சுந்தரி மனசுக்குள் இனிமேல் தேவை இலலாமல் அவளுக்கும் இனியவனுக்கும் நடுவே நடப்பவற்றை யாரிடமும் பகிரக் கூடாது என்று முடிவு செய்துக் கொண்டாள்.
🌼🌸❀✿🌷
“நான் எப்படி இருக்கேன் மோகினி? ஹான்ட்சம் பிரின்ஸ் மாதிரி இருக்கேனா?” டை முடிச்சை சரி செய்துக் கொண்டு சுந்தரியிடம் கேட்டான் இனியவன்.
“என் ஹஸ்பன்ட் மாதிரி இருக்கீங்க!” என்று பதில் சொன்னாள் சுந்தரி.
“என்னோட பட்டிக்காட்டு மோகினி என்ன எல்லாம் பேசுறா! பயங்கரமா மாறிட்டீயே? காரணம் யாரு? அம்மாவா? அப்பாவா?”
“இரண்டு பேரும் இல்லை.”
Copyright © 2009 - 2023 Chillzee.in. All Rights Reserved.