This is a Mathiyur Mysteries Novels series episode. Visit Mathiyur Mysteries Novels series page for other current Chillzee Original stories.
மதியூர் மிஸ்டரீஸ் கதைகளின் தொடக்கப் புள்ளியான இந்தக் கதை மதியூர் எனும் கற்பனைக் கிராமத்தில் நிகழ்வது. இந்தக் கதைகளில் "இன்ஸ்பெக்டர் தேன்" கதையில் நமக்கு அறிமுகமான மதியூர் கிராமம், இன்ஸ்பெக்டர் தென்றல்வாணன் மற்றும் அவனின் மனைவி சத்யா மீண்டும் முக்கிய பங்கு வகிக்கப் போகிறார்கள்.
இன்ஸ்பெக்டர் தேன் என்று அழைக்கப்படும் தென்றல்வாணன் நேர்மையான போலீஸ் அதிகாரி. தன் குடும்பத்தின் நலத்திற்க்காக அமைதியான கிராமம் என அவன் கருதும் மதியூருக்கு மாற்றல் வாங்கி வந்தவன்.
தென்றல்வாணனின் மனைவி சத்யா அவனுக்கு வீட்டிலும், வேலையிலும் ஆதரவாக இருப்பவள்.
🌼🌸❀✿🌷
Listen to the audio episode:
Flash News:
துணை இன்ஸ்பெக்டர் ஜெனரல் சக்தி ராஜினாமா!!!
டி வியில் பெரிய எழுத்துக்களில் மின்னிய செய்தியைப் படித்து அதிர்ந்துப் போன தென்றல்வாணன், டிவி சத்தத்தை அதிகமாக்கினான்.
“... சற்று முன் கிடைத்த செய்தி.
சென்னை மாநகரத்தின் சிறப்பு துணை இன்ஸ்பெக்டர் ஜெனரல் பதவியில் இருந்த பெண் ஐ.பி.எஸ் ஆஃபிசர் சக்தி தன் பதவியை ராஜினாமா செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
Copyright © 2009 - 2023 Chillzee.in. All Rights Reserved.