தென்றல்வானனிடம் சொல்லி விட்டு சமைக்க திரும்பிய போது, டிவியில் பார்த்த சக்தியே இப்போதும் சத்யாவின் கண் முன் வந்து நின்றாள்.
என்ன ஒரு கெத்தாக அவ்வளவு கூட்டத்தைத் தாண்டி சென்று காரில் ஏறிச் சென்றாள்.
‘ஐ லைக் யூ, சக்தி!’
🌼🌸❀✿🌷
சப் இன்ஸ்பெக்டர் அபினவ் போலீஸ் காரில் இருந்து இறங்கி வெளியே வந்தான்.
மதியூர் மலை வாசஸ்தலமாக இருந்தாலும், சூரியன் சுள்ளென்று அவன் மீது அடித்தான்.
கான்ஸ்டபில் விஜயன் காரை பார்க் செய்து விட்டு அபினவின் பக்கத்தில் வந்து நின்றான்.
“இந்த மார்க்கெட் கூட்ட நெரிசல்ல மாட்டிட்டு கஷ்டப்பட்டு தான் ஆகனும் போலருக்கு.”
“வியாபாரிங்க கிட்ட யாரும் பணம் கேட்டு மிரட்டக் கூடாதுன்னு தேன் சார் அனுப்பி இருக்கார். அதை ஒழுங்கா செய்வோம் புலம்பாம வாங்க விஜயன்.”
மார்க்கெட்டின் மைய பகுதிக்கு செல்ல இருவரும் கூட்ட நெரிசலில் கலந்து நடந்தார்கள்.
“பேரு ஹில் ஸ்டேஷன், என்ன மாதிரி வெயில் அடிக்குது.”
“புலம்பாம வாங்க விஜயன்!”
“உங்களுக்கு என்ன சார்? இளவயசு, ஹீரோ மாதிரி இருக்கீங்க, நான் அப்படியா?”
விஜயனுக்கு பதில் சொல்ல திரும்பியதால், கவனிக்காமல் எதிரே வந்த பெண்ணின் மீது மோதிக் கொண்டான் அபினவ்.