வெற்றி தனது பேக்டரிக்குள் காரை சென்று நிறுத்தினான். அதுவரையிலும் சௌமி தனது பேக்டரி புராணத்தை சொல்லிக் கொண்டிருந்தாள்
”சௌமி முடிஞ்சிடுச்சா”
“இன்னும் கொஞ்சம் இருக்கு”
“பேக்டரி வந்துடுச்சி வா இறங்கு பின்னாடி பேசலாம்” என சொல்லிவிட்டு வெற்றி இறங்க சௌமியும் உடன் இறங்கினாள்
”வெற்றி இதானா நாராயணன் சாரோட பேக்டரி”
“ஆமாம் உள்ள வா” என அவளை அழைத்துக் கொண்டு ஆபீஸ் ரூமுக்குச் சென்றான் வெற்றி.
இன்று விடுமுறை என்பதால் ஆட்கள் இல்லாமல் வெறுமையாக இருந்தது. சௌமியும் அவற்றை எல்லாம் சுற்றி பார்த்துக் கொண்டே ஆபிஸ் ரூமிற்கு செல்ல தலைமை இருக்கையில் வெற்றி அமர்ந்திருந்தான்
”உள்ள வாங்க” என அவன் அழைக்கவும் வியந்து போய் உள்ளே வந்தவள்
”வெற்றி நீ அங்க உட்கார்ந்திருக்க மிஸ்டர். நாராயணன் இல்லையா”
“முதல்ல உட்காரு” என சொல்லவும் அவளும் எதிரே இருந்த இருக்கையில் அமர்ந்துக் கொண்டாள். வெற்றியோ அவளிடம்
”நாராயணன் என் தாத்தாதான் நான் அவர் பேரன். இந்த பேக்டரி என்னோடது” என வெற்றி சொல்லவும்
”வெற்றி ஆனா இதை ஏன் என்கிட்ட நேத்தே நீ சொல்லலை” என வியப்பாக கேட்டாள்
Sasirekha has written more than 33 Tamil series in Chillzee and many more Novels in Chillzee KiMo.
Copyright © 2009 - 2023 Chillzee.in. All Rights Reserved.