This is a Mathiyur Mysteries Novels series episode. Visit Mathiyur Mysteries Novels series page for other current Chillzee Original stories.
Listen to the audio episode:
“அஹல்யா டீச்சர் நீங்களா? ஏதாவது உதவி வேணுமா? ஹிஹிஹிஹி!”
கான்ஸ்டபிளின் திடீர் வழிசல் அபினவுக்கு எரிச்சலைக் கொடுத்தது.
அந்த அஹல்யா டீச்சருக்கும் அப்படி தான் இருந்திருக்க வேண்டும். விருட்டென நிமிர்ந்தவள், கான்ஸ்டபிளின் பக்கமே பார்க்காமல் அபினவின் கையில் இருந்த தக்காளியை வாங்க கையை நீட்டினாள்.
தக்காளியை கொடுத்தப் போது அபினவின் விரல் நுனி லேசாக அவளின் உள்ளங்கையில் பட தன்னிச்சை செயலாக கையை எடுத்துக் கொண்டாள்.
அதற்கு மேல் ஒரு விநாடிக் கூட அங்கே நிற்காமல் மகனின் கையை ஒரு கையில் பிடித்துக் கொண்டு விடு விடுவென நடந்து சென்றாள்.
அபினவ் அவள் போவதையே யோசனையோடு பார்த்துக் கொண்டிருந்தான்.
“செமையா இருக்காள்ல சார். பார்த்தாலே ஜில் ஜில்லுன்னு இருக்கு. என் பொண்ணு ஸ்கூல்ல பேரென்ட் டீச்சர் மீட்டிங் வச்சா என் வீட்டம்மாவை அனுப்பாம நானே போவேன்.”
“என்ன விஜயன் இப்படி அசிங்கமா பேசுறீங்க? அவங்க பையனோட மார்க்கெட் வந்திருக்காங்க. போலீஸா இருந்துட்டு இப்படி பேசுறீங்க?”
“ஹையோ சார்! உங்களுக்கு இந்த ஊரு கதை எல்லாம் தெரிய மாட்டேங்குது. சொன்னது நானா இருக்குறதால இவ்வளவு சொன்னேன். இதே, ஊருல இருக்க பொம்பளைங்கள கேட்டு இருந்தீங்கன்னு வைங்க, அவ்வளோ தான்! காதை பொத்திக்குவீங்க. அந்த பொம்பளை ஒரு மாதிரி சார். நடத்தை சரி இல்லை.”
அவனுடைய விரல் நுனி பட்ட உடன் அவள் கையை இழுத்துக் கொண்டதை நினைத்துக்
Copyright © 2009 - 2023 Chillzee.in. All Rights Reserved.