கொண்டான் அபினவ்.
அவள் அப்படி தவறானவளாக இருக்க முடியாது.
“நாம வந்த வேலையை கவனிப்போம் விஜயன். நீங்க அந்த பக்கம் ரவுன்ட்ஸ் போங்க, நான் இங்கே பார்க்கிறேன்.”
“ஓகே சார்.”
அடுத்த இரண்டு மணி நேரங்கள் மார்க்கெட்டின் குறுகிய பாதையில் நடந்து கண்காணித்தான் அபினவ்.
இன்ஸ்பெக்டர் தென்றல்வாணன் அவனை நம்பி இந்த பொறுப்பை ஒப்படைந்திருந்தார். அதனால் கண்ணும் கருத்துமாக கண்காணித்து பெண்களிடமோ, வியாபரிகளிடமோ யாரேனும் வம்பு செய்தால் மிரட்டி அனுப்பி வைத்தான்.
நேரம் போக போக கூட்டம் குறையத் தொடங்கியது.
அவனை தேடி கண்டுப்பிடித்து வந்த கான்ஸ்டபிளும்,
“கூட்டம் குறைஞ்சிருச்சு சார். இதுக்கு மேல இருந்தா வேஸ்ட். வாங்க ஒரு டீ அடிச்சுட்டு கிளம்பலாம்,” என்றான்.
“சரி வாங்க!” என அபினவும் ஏற்றுக் கொண்டான்.
மார்கெட்டின் பக்கத்தில் இருந்த டீக்கடைக்கு இருவரும் சென்றார்கள்.
“நீங்க உட்காருங்க சார். உங்களுக்கு நான் வாங்கிட்டு வரேன்,” என்று அபினவிடம் சொன்ன விஜயன், டீக்கடை பெஞ்சில் உட்கார்ந்து அவர்களை வேடிக்கை பார்த்து கொண்டிருந்த கிளி ஜோசியக்காரனிடம்,