முன்னுரை
திருமணம் நடைபெறாமலே உறவினர்களால் இளம் விதவையாக்கப்பட்ட இளம்பெண்ணின் வாழ்வில் அடுத்து நிகழப்போகும் நிகழ்வுகளின் கதை இது
1980
பூசாரிபட்டி கிராமம்
இன்று ப்ளஸ்டூ தேர்வு முடிவுகள் வெளிவந்தது, அதற்காகவே மாணவ மாணவிகள் தங்களின் பரிட்சை முடிவுகள் தெரிந்துக் கொள்ள தாங்கள் படித்த பள்ளியில் குவிந்திருந்தார்கள். வெற்றி பெற்ற மாணவர்களின் பரிட்சை எண்ணை ஒரு பெரிய போர்டில் எழுதியிருந்தார்கள் அந்த போர்டை சுற்றியே மாணவ மாணவிகள் ஆர்வத்துடன் தங்களின் எண்ணை தேடிக் கொண்டிருந்தார்கள். அதே வரிசையில் சுந்தரேசனும் ஒரு எண்ணை தேடிக் கொண்டிருந்தான். அவனைக் கண்டு சுற்றியிருந்த மாணவர்களுக்கு சிரிப்பாக இருந்தது
”அண்ணே என்ன நீ இங்க இருக்க, இன்னுமா நீ படிச்சிக்கிட்டு இருக்க, இப்பவாச்சும் பாஸானியா இல்லை பெயிலானியான்னு பார்க்க வந்தியா” என கேலி செய்ய அதற்கு சுந்தரேசனோ
”எலேய் அடங்குங்கடா நான் எல்லாம் படிக்காத, மேதை உங்களை போல படிச்சிதான் முன்னுக்கு வரனும்னு இல்லை, நமக்கெல்லாம் பட்டறவு தேவையில்லைடா அனுபவ அறிவு ஒண்ணு போதாதா”
”பின்ன எதுக்காக இங்க வந்தியாக்கும்”
“ஏன் நான் எதுக்கு வந்தேன்னு உனக்கு தெரியாதாக்கும், எல்லாம் என் மாமன் பொண்ணோட மார்க் பார்த்துட்டு போலாம்னு வந்தேன்”
Sasirekha has written more than 33 Tamil series in Chillzee and many more Novels in Chillzee KiMo.
Copyright © 2009 - 2023 Chillzee.in. All Rights Reserved.