“அற்புதம் சார். உங்க சீட்டுல சக்திதேவி அம்மன் வந்திருக்காங்க. நீங்க சொன்னவங்க இவ்வளவு நாளா எவ்வளவோ கஷ்டங்களை அனுபவிச்சிட்டு இருக்காங்க. சொத்து, சுகம், உற்றார் உறவினர் எல்லாரையும் அழிச்சிட்டாங்க. ஆனாலும் மனசை தளர விடக் கூடாது. அவங்க கஷ்டம் எல்லாம் போற நேரம் வந்தாச்சு. சீக்கிரமே நல்ல நேரம் வரப் போகுது. எல்லா கெட்டதும் அவங்களை விட்டு ஓடிப் போக போகுது.”
“அபினவ்!”
ஜோசியக்காரன் சொன்ன வார்த்தைகளை மும்முரமாக ஆச்சர்யத்துடன் கவனித்துக் கொண்டிருந்த அபினவ், இன்ஸ்பெக்டரின் குரல் கேட்டு திரும்பிப் பார்த்தான். போலீஸ் காரில் இருந்த தென்றல்வாணன் அவனைப் பார்த்து கை அசைத்தான். தொப்பியை சரி செய்துக் கொண்டு பெஞ்சில் இருந்து எழுந்து காரிடம் சென்றான் அபினவ்.
“என்ன இது? மார்கெட்ல ரோந்து போக அனுப்பினா உட்கார்ந்து கதை பேசிட்டு இருக்க?”
“இவ்வளவு நேரம் மார்க்கெட்டுல இருந்தோம் சார். இப்போ தான் ஒரு டீ குடிக்கலாம்னு வந்தோம்.”
“சரி சரி! மார்க்கெட்ல எந்த ப்ராப்ளமும் இல்லையே?”
“நோ சார்!”
“குட்! டீ குடிச்சுட்டு இரண்டு பேரும் சவுத் சைட் போங்க. வம்பு செய்ற மாதிரி யாரவது கண்ணுல பட்டா மிரட்டி வைங்க.”
“ஓகே சார்!”
“முடிச்சுட்டு ஸ்டேஷனுக்கு வந்து சேருங்க.”