கிசுகிசுத்தாள் பவித்ரா.
“குட் மார்னிங், பாரு!”
“குட் மார்னிங் பாரதி!”
இருவருக்கும் பொதுவாக,
“குட் மார்னிங்!” என்று சொல்லி விட்டு பவித்ராவின் அருகில் அமர்ந்தாள் பாரதி.
பவித்ராவின் கண்கள் தோழியின் முகத்தை ஆராய்ந்தன. தோழியின் பார்வையில் முகம் சிவந்த பாரதி, அவசரமாக உமா பக்கம் திரும்பி,
“உமா, காஃபி, டீ ஏதாவது கிடைக்குமா?” என்று வாயில் வந்ததைக் கேட்டாள்.
தோழியின் முக மாற்றத்திலேயே வேண்டிய பதில் கிடைத்து விட,
“அட, யாரு காஃபி டீ கேட்குறது? நம்ம பாரதி தானா? உனக்கு தான் அது எதுவும் பிடிக்காதே?” என்றாள் பவித்ரா கிண்டலாக.
“ப்ச்... பவி” என பாரதி அலுத்துக் கொள்ள,
“சரி சரி உன்னை ஒன்னும் சொல்லலை...” என்றாள் பாரதி!
அதற்குள் உமா வேலை ஆளை அழைத்து பாரதிக்கு காஃபி கொண்டு வந்து தர சொன்னாள். அடுத்த நிமிடமே காஃபி வந்து சேர்ந்தது.
அதை கையில் வாங்கிக் கொண்டு,
“உங்க இரண்டு பேருக்கும்?” என மற்ற இருவரையும் பார்த்துக் கேட்டாள் பாரதி.