(Reading time: 8 - 16 minutes)
Unnaruge naan irunthaal
Unnaruge naan irunthaal

  

அவருக்கு போர் எல்லாம் அடிக்காது... அது தான் அண்ணா இருக்காரே...” என்றாள் பாரதி!

  

நீ என்ன லூசா பாரு? போ... நீ எப்போதும் தங்கும் ரூமை விவேக்குக்கு காட்டு... நீயூம் கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடு...” என்று மீண்டும் சொன்னாள் பவித்ரா.

  

பாரதி அப்போதும் தயங்கவும்,

  

அடடா பாரதி மேடம், ரொம்ப எல்லாம் வெட்கப் படாதீங்க... போங்க போங்க, மதுவுக்கு நானும் அத்தையும் கம்பெனி கொடுக்கிறோம்...” என்றாள் பவித்ரா!

  

அதற்கு மேல் பாரதியால் மறுக்க முடியவில்லை...

  

🌼🌸❀✿🌷

  

விவேக்குடன் அந்த அறைக்குள் தயக்கத்துடன் நுழைந்த பாரதி, அவள் இங்கே தங்கும் போதெல்லாம் இந்த அறையை தான் பயன்படுத்துவது என்று அவனிடம் சொன்னாள். இருவரும் அந்த அறையில் இருந்த கட்டிலில் அமர்ந்தார்கள்... என்ன பேசுவது என்றுப் புரியாது பாரதி அமைதியாக இருக்க, விவேக்கும் ஒன்றிரு நிமிடங்கள் அமைதியாக இருந்தான்... பின்,

  

ரதி, நான் உன் கூட சில விஷயங்கள் பேசனும்...” என்றான் விவேக்.

  

சொல்லுங்க...” என்றாள் பாரதி ஆச்சர்யத்துடன்.

  

அவளின் ஆச்சர்யத்தை கவனித்தவன்,

  

இதுல என்ன ஆச்சர்யம்?" என்றான்.

 

பாரதியின் முகத்தில் வெட்கத்தின் சாயல் தோன்றவும், விவேக்கிற்கு அவள் என்ன

3 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.