மதியூர் மிஸ்டரீஸ் - 1 - தொடர்கதை - ஒரு கிளி உருகுது - 13 - Chillzee Story
This is a Mathiyur Mysteries Novels series episode. Visit Mathiyur Mysteries Novels series page for other current Chillzee Original stories.
“அந்த மார்க்கெட் வேலை ரொம்ப போர் டீச்சர். அதை மாத்தினதால எனக்கு ஒரு தொல்லையும் இல்,லை” என்று விளக்கமும் கொடுத்தான் அபினவ்.
“உங்களுக்கு புரிய மாட்டேங்குது. ப்ளீஸ், இதுக்கு மேல என் கிட்ட வந்து பேசாதீங்க,” என்றாள் அஹல்யா.
“ஏன் நான் பேசக் கூடாது? அந்த சேகரன் மாதிரி என்னையும் உங்களையும் வச்சு ஊருல தப்பா பேசுவாங்கன்னா?”
அபினவ் இப்படி கேட்பான் என்று அஹல்யா நினைத்திருக்கவில்லை. மெல்லிய அதிர்வோடு அவனைப் பார்த்தவள், உடனேயே தன்னை சுதாரித்துக் கொண்டாள்.
“அதை பத்தி எல்லாம் நான் கவலைப் பட மாட்டேன். என்னைப் பத்தி எனக்குத் தெரியும். உங்களுக்கு உங்க வேலைல தொல்லை வரும்னு சொன்னேன்”
“வந்தா வந்துட்டு போகுது விடுங்க. நாம வேற எதையாவது பேசுவோம்.
எங்க வீட்டுல நானும் என் அக்காவும் மட்டும் தான். அம்மா தவறிட்டாங்க. அக்காக்கு கல்யாணம் ஆகி செட்டில் ஆயிட்டா. என் அப்பா அவக் குடும்பம் கூடவே இருக்கார். நான் இங்கே தனிக் காட்டு ராஜாவா சுத்திட்டு இருக்கேன்”
“ஏன் அப்படி?”
“எப்போவுமே எனக்கும் என் அப்பாக்கும் ஆகாது. என் அக்கா கிட்ட நான் சொத்துல பங்கு கேட்க மாட்டேன்னு சொன்னேனோ இல்லையோ, அப்பாவை அவக் கூட வச்சுக்குறதுல அவளுக்கு பிரச்சனை இல்லாம போச்சு. அவருக்கும் அவளை தான் பிடிக்கும். எனக்கும் அது வசதியா போச்சு.”
“குடும்பம், உறவுகள் எல்லாம் எவ்வளவு மாறிப் போயிடுச்சு?”