“சக்தி மேடம்! குட் ஈவ்னிங் மேடம்” – எழுந்து அட்டென்ஷனில் நின்று சல்யூட் அடித்தான் அபினவ்.
“அவங்க உன் டிபார்ட்மென்ட்ல இருந்து ராஜினாமா செய்து நிறைய நாள் ஆச்சு. ஓவரா பிலிம் காட்டாம சும்மா உட்காரு. சக்தி என்னோட பிரென்டா இங்கே வந்திருக்காங்க. உன் அஹல்யாவோட வாழ்க்கையில புகை மூடி இருக்க மர்மங்களை தெளிவாக்க உதவப் போறாங்க”
“தேங்க் யூ மேடம்”
“அபினவ் நீங்க அஹ்லயாவை மீட் செய்ததுல இருந்து odd ஆ நடந்ததைச் சொல்லுங்க”
“ஊருல அஹல்யாவைப் பத்தி ஒரு மாதிரி தப்பா பேச்சு இருக்கு மேடம். எனக்கு என்னவோ அது யாரோ கிளப்பி விட்ட புரளின்னு தோணுது.
அதை தவிர அவங்க வீட்டு எதிர் வீட்டுல இருக்குறவங்க அஹல்யாவை கிட்டத்தட்ட எதிரி மாதிரியே பார்க்குறாங்க. அந்த தெருவுல இருக்க பசங்க இந்த வீட்டுல பால் விழுந்தா கூட இவங்களுக்காக எடுக்க பயப்படுறாங்கன்னா பார்த்துக்கோங்களேன். நான் அஹல்யா கிட்ட பேசினேன்னு இன்ஸ்பெக்டர், ஏன் கமிஷனர் வரைக்கும் கூட கம்ப்ளெயின்ட் லெட்டர் கொடுத்திருக்காங்க.
அந்த பழைய கேஸ் ஃபைல்ல ரெகார்ட் ஆகி இருக்க எவிடென்ஸ் வச்சு பார்த்தா. இந்த எதிர் வீட்டு டீச்சர் அஹல்யாக்கும் கொலையான அந்த சேகரனுக்கும் affair இருந்துச்சுன்னு ஸ்ட்ராங்கா வாக்குமூலம் கொடுத்திருக்காங்க. இவங்களை தவிர மீதி எல்லோருமே கேள்விப்பட்டோம், சொன்னாங்க அப்படின்னு தான் சொல்லி இருக்காங்க. இவங்க மட்டும் தான் எனக்கு 100% ஷுயரா தெரியும்ன்னு ரெகார்ட்லேயே சொல்லி இருக்காங்க.
மத்தபடி தேன் சார். அவரும் அஹல்யாவை விட்டு தள்ளியே இருன்னு சொன்னார்”
சக்தியும் சத்யாவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.
🌼🌸❀✿🌷
This is a Mathiyur Mysteries Novels series episode. Visit Mathiyur Mysteries Novels series page for other current Chillzee Original stories.
தொடரும்