“நீங்க ஒரே பொண்ணா அஹல்யா? உங்க சொந்த ஊரு எது?”
அஹல்யா உதடுகளை இறுக்க மூடிக் கொண்டிருந்தாள்.
“உங்களுக்கே என் கிட்ட சொல்லனும்னு தோணும் போது சொல்லுங்க.”
அஹல்யா அமைதியாக இருந்தாள்.
“இந்த காலத்துல எல்லாம் இப்படி அமைதியா இருந்து ஒன்னும் சாதிக்க முடியாது டீச்சர். எதிர்த்துப் பேசனும், அடிக்கனும். அப்போ தான் எல்லாம் சரி ஆகும். அன்னைக்கு உங்க எதிர் வீட்டுக்காரங்க அந்த கத்து கத்துறாங்க நீங்க பாட்டுக்கு கம்முன்னு போறீங்க? அப்படி இருந்தா எப்போவும் கத்திட்டே தான் இருப்பாங்க”
“அவங்க கிட்ட என்ன சொல்ல சொல்றீங்க?”
“உன் வேலையை பார்த்துட்டு போன்னு சொல்லனும்”
“அவங்க சொன்னதுக்காக உங்க ட்யூட்டியை மாத்தின இன்ஸ்பெக்டர் கிட்ட நீங்க அப்படி தான் சொன்னீங்களா?”
“அது வேற. அவர் என்னோட சீனியர் ஆபிசர். மத்தபடியும் அவர் என் அண்ணன் மாதிரி. அவரும் அவரோட குடும்பமும் தான் எனக்கு இங்கே இருக்க சொந்தக்காரங்க. அந்த அக்கா கிட்ட உங்களை பத்தி நிறைய சொல்லி இருக்கேன்”
“எந்த அக்கா?”
“இன்ஸ்பெக்டரோட மனைவி. அவங்க பேரு சத்யா. உங்களுக்கு கூட தெரியும். அவங்க பொண்ணு ஷாலினி உங்க ஸ்டூடன்ட்”
“அவங்க இன்ஸ்பெக்டரோட மனைவியா? அது எனக்கு தெரியாதே. அவங்க கிட்ட எதுக்கு