“நான் அஹல்யா வீட்டுக்கு போய் ஷாலினி மேத்ஸ் பத்தி சும்மா பேச்சுக் கொடுக்குறேன். நீங்க எதிர்ல அபினவ் சொன்ன மாதிரி யாராவது தெரியுறாங்களான்னு பாருங்க” – சத்யா
சத்யா அந்த வீட்டு கேட்டை திறக்க போன நேரம், எங்கேயோ இருந்து, “சத்யா” என்று ஒரு குரல் அழைத்தது.
சக்தி ஜீப்பில் இருந்து இறங்கி பார்த்தாள். சத்யா திரும்பிப் பார்த்தாள்.
“சத்யா, அங்கே எதுக்கு போற, இங்கே வா...”
“சக்தி, நான் சொன்னேனே என் பிரெண்ட் அது இவங்க தான்” என்று ரகசிய குரலில் சக்தியிடம் சொல்லி விட்டு, தோழியிடம் பேசினாள் சத்யா.
“சவீதா, உன்னை கவனிக்கவே இல்லை”
“அங்கே எதுக்கு போற சத்யா? வா வீட்டுக்கு வா”
சவீதாவின் கேள்வி சக்தி & சத்யாவை யோசிக்க வைத்தது.
“சத்யா உங்களோட இந்த பிரென்ட் டீச்சரா?” – சக்தி
“நானும் அதை தான் யோசிச்சேன் சக்தி. ஆமா, சவீதா டீச்சர் தான்”
“அப்போ நாம் தேடி வந்தது உங்க பிரெண்டை தான்! அருமை, அருமை!”
இரண்டுப் பேரும் தங்களுக்குள் ரகசியமாக பேசிக் கொண்டே சவீதாவை தொடர்ந்தார்கள்.
🌼🌸❀✿🌷
This is a Mathiyur Mysteries Novels series episode. Visit Mathiyur Mysteries Novels series page for other current Chillzee Original stories.
தொடரும்