This is a Mathiyur Mysteries Novels series episode. Visit Mathiyur Mysteries Novels series page for other current Chillzee Original stories.
ஆர்கிமெடிஸ் ஸ்டைலில் ‘யுரேகா, யுரேகா’ என்பதுப் போல கண்டுப்பிடித்துவிட்டேன் என்று குதூகலித்த சத்யாவைப் பார்த்து பொங்கி வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டாள் சக்தி.
அபினவிடம் அஹல்யா சொன்னதைப் பற்றி சத்யா சொன்னப் போதே, இதே எண்ணம் தான் அவளுக்கும் தோன்றியது. பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று சத்யாவிடம் சொல்லாமல் விட்டிருந்தாள்.
“சக்தி, சவீதா அன்னைக்கு பார்த்ததுக்குப் பின்னால வேற என்னமோ இருக்கு. அஹல்யா வாயைத் திறந்து சொன்னா தான் உண்மையா என்ன நடந்ததுன்னு தெரியும். ஆனால் சவீதா நினைச்சது தப்பு,” என்றாள் சத்யா படப்பட என!
“கலக்குறீங்களே சத்யா! புலியோட மனைவி புஸ்ஸி கேட்டா இருக்க முடியுமா!” என்றாள் சக்தி கேலியாக.
“கிளம்புங்க, கிளம்புங்க சக்தி,” என்று அவளின் கிண்டலைப் பற்றி கவலைப் படாமல் அவசரப் படுத்தினாள் சத்யா.
“கடைக்கு போக இவ்வளவு அவசரப் பட வேண்டாம் சத்யா. நைட் ஒன்பது மணி வரைக்கும் கடை இருக்கும்னு சொன்னாங்க!”
“கடைக்கு எல்லாம் பொறுமையா போகலாம் சக்தி. இப்போ நாம டாக்டர் பிரசாத்தை போய் பார்க்கலாம்.”
“டாக்டரா??? கேஸ் க்ளோஸ்ட்ன்னு நினைச்சேனே???”
“நனைக்காதீங்க, காயப் போடுங்க!”
“அச்சோ!!! ப்ளீஸ், கடிக்காதீங்க சத்யா!”
“கடிக்கலை, நீங்க வாங்க, நாம டாக்டரைப் பார்க்கப் போவோம்.”
Copyright © 2009 - 2023 Chillzee.in. All Rights Reserved.