பாட்டியின் அறை என தெரியாமல் சிவசங்கரனைக் கண்டு ஒளிந்துகொண்ட விஜயலட்சுமி அங்கே பாட்டி தன்னையே ஏற இறங்க பார்த்து சந்தேகப்படுவதைக் கண்டு அமைதியாக நின்றாள்
”என்னம்மா இப்படி பயந்து போய் இருக்க என்னாச்சி உனக்கு”
“அது வந்து பாட்டி அது” என தடுமாறினாள்
”என்னம்மா சொல்லு, பாட்டி நான் இருக்கேன்ல நான் தீர்த்து வைக்கிறேன்”
“அது வந்து பாட்டி அவர் வெற்றி என்கிட்ட வந்து” என அவள் ஒரு மாதிரியாக இழுத்து இழுத்து பேசவும் பாட்டிக்கு சிரிப்பே வந்தது
”அவனுக்கு உன்னை ரொம்ப பிடிச்சிருக்கு, அதான் உன்கிட்ட விளையாடறான்”
“பாட்டி வெளிய யாரோ வந்திருக்காங்க”
“அப்படியா யார் வந்திருக்காங்க“
“தெரியலை பாட்டி”
”சரி நீ இங்கயே இரு, வெற்றி வந்தா உன்னை என்ன செய்றான்னு பார்க்கலாம், நான் போய் வெளிய யார் வந்திருக்காங்கன்னு பார்த்துட்டு வரேன்” என சொல்லிவிட்டு சென்றுவிட விஜிக்கு நிம்மதியானது.
அந்த அறைக்குள் இருந்துக் கொண்டே வெளியே ஹாலில் நடப்பதை பார்த்துக் கொண்டிருந்தாள்.
”வெற்றி எனக்கு பேரன்தான் இருந்தாலும், அவனோட வாழ்க்கையில முடிவெடுக்கற உரிமை அவனுக்கும் இருக்கு, என்னால அவனை வற்புறுத்த முடியாது” என தாத்தா சொல்லவும்
Sasirekha has written more than 33 Tamil series in Chillzee and many more Novels in Chillzee KiMo.
Copyright © 2009 - 2023 Chillzee.in. All Rights Reserved.