This is a Mathiyur Mysteries Novels series episode. Visit Mathiyur Mysteries Novels series page for other current Chillzee Original stories.
அஹல்யாவின் முக மாற்றத்தை ரசித்துக் கொண்டே,
“என்ன பதில் சொல்லாம இப்படி பார்க்குறீங்க? உங்க நாய்க்குட்டி கிட்ட பேசலாமா? அது அலோவ்டா?” என மீண்டும் கேட்டான் அபினவ்.
அஹல்யா பற்களை கடித்துக் கொண்டாள்.
“இங்கே பாருங்க அஹல்யா, நான் கடந்த காலத்தைப் பத்தி யோசிக்காம நிகழ் காலத்தையும், எதிர் காலத்தையும் மட்டும் யோசிச்சே வாழ்றவன். எனக்கு உங்களை... உன்னைப் பிடிச்சிருக்கு. உன் கடந்த காலத்துல என்ன இருந்தாலும் எனக்கு கவலை இல்லை...” என்றான் அபினவ்.
“உங்களுக்கு பிடிச்சா போதுமா? எனக்குப் பிடிக்க வேண்டாமா?” பட்டென்று கேட்டாள் அஹல்யா.
“உனக்கு என்னைப் பிடிச்சிருக்குன்னு தெளிவா தெரிஞ்சதால தான் நேராவே பேசுறேன் அஹல்யா. எப்போவும் மாசத்துக்கு ஒரு தடவை பாங்க் பக்கம் வர நீ, இப்போ எல்லாம் ஒவ்வொரு வாரமும் வரதுக்கு காரணம் என்ன? சரி, வேலை இருக்குன்னு யோசிச்சாலும், வந்து வேலையை முடிச்சுட்டு கிளம்பனும் தானே? அது என்ன அப்படியே சுத்தி சுத்தி தேடுற வேலை?”
“கடைசில நீங்களும் இப்படி தானா? ஒரு பொண்ணு ஒரு நாலு வார்த்தை பேசிடக் கூடாது. எங்கே அவன்னு பார்த்திரக் கூடாது. உடனே அதுக்கு வேற அர்த்தம் வந்திரும். ச்சே. உங்க மேல எவ்வளவு மரியாதை வச்சிருந்தேன்.”
“சரி, அஹல்யா. இது வரைக்கும் அப்படி யோசிக்கலைனா இனிமேல் யோசி... யோசிங்க. நான் தப்பானவன் இல்லைன்னு என் கண்ணைப் பார்த்தாலே தெரியலையா?”
“இந்த பேச்சே வேண்டாம். ப்ளீஸ் இதோட நிறுத்திடுங்க.”
Copyright © 2009 - 2023 Chillzee.in. All Rights Reserved.