வருடம் 1981
மெட்ராஸ்
தான் ஒரு விதவை என ஜானகி சொன்னதும், விஸ்வநாதனால் அதை நம்ப இயலவில்லை, அறைக்கு வெளியே இருந்த கருணா கூட பதறிக் கொண்டு அறைக்குள் வந்து நின்றான், அவன் வரவும் ஜானகி தலை குனிந்தபடி அழுதாள்.
”என்ன சொல்ற ஜானகி நீ விதவையா, அப்பா இவள் என்னப்பா சொல்றா, எனக்கு பைத்தியமே பிடிச்சிடும் போல இருக்கு” என அலற விசு தன் மகனை சமாதானம் செய்தார்
“பொறு மகனே, என்ன ஏதுன்னு நான் கேட்கறேன், அவசரப்படாத, பதட்டப்படாத நீ அமைதியாயிரு” என அதட்ட அவனும் அமைதியானான். ஆனாலும் கலக்கத்துடன் இருந்தான்.
ஜானகியோ அவசரமாக சுந்தரேசனின் போட்டோ முன் நின்று கண்கள் கலங்க விசுவநாதன் அந்த போட்டோவையும் அவளையும் மாறி மாறிப் பார்த்துவிட்டு
”எதுக்காக இப்படியொரு பொய்யை சொன்ன” என கேட்க அவளோ வியந்தபடியே அவரைப் பார்த்து
”பொய்யா”
”பின்ன விதவைன்னு சொன்னா என்ன அர்த்தம், உனக்கு எப்ப கல்யாணம் ஆச்சி இந்த விசயத்தை பத்தி உன் அப்பா என்கிட்ட சொல்லவேயில்லையே”
”அவர் மறைச்சிட்டாரு உண்மையிலயே நான் விதவைதான், இதோ இவர்தான் என் புருஷன், என்னோட மாமா சுந்தரேசு மாமா” என அழுதபடி சொல்ல இடிந்துப் போனான் கருணா அப்படியே பொத்தென தரையில் அமர்ந்துவிட்டான்
ஜானகியோ இன்னும் அழத்தொடங்க விசுவோ அவள் சொன்னதைக் கெட்டு
Sasirekha has written more than 33 Tamil series in Chillzee and many more Novels in Chillzee KiMo.
Copyright © 2009 - 2023 Chillzee.in. All Rights Reserved.