அபினவை பற்றி யோசித்த உடனே உலகமே இனிமை நிறைந்ததாக மாறி விட்ட மாயை அவளை சுற்றிப் படர்ந்தது. அபினவ் – தனுஷ் போல பக்கத்து வீட்டு பையன் போன்ற தோற்றம். கண்ணியம் – இது தான் அஹல்யாவை அவன் வசம் ஈர்ப்பது!
உதவுகிறேன் என்று உரசுவது கிடையாது. பேசுகிறேன் என்று தொடுவது கிடையாது. கண்களை நேராக பார்த்து பேசுவான். இப்போது அவனுடைய காதலை சொன்னப் போது கூட மனசுக்குள் காதலை ஒளித்து வைத்துக் கொண்டு சாதாரணமாக பேச முடியாது என்று தானே சொன்னான், நேர்மையானவன்.
“எனக்கு ஏத்த பையனைக் கண்டுப்பிடிக்குறது ஈசிம்மா. சிம்பிளா இருந்தா போதும். ஓவர் ஸ்மார்ட்டா இருக்கனும்னு எல்லாம் இல்லை. நல்லவனா இருக்கனும். சும்மா சும்மா வழியக் கூடாது. ஹானஸ்டி, சின்சியாரிட்டி இருக்கனும்.”
போன ஜென்ம நாட்கள் போல தோன்றிய பழைய வாழ்க்கையில் அவள் சொன்னது நினைவுக்கு வந்தது.
அபினவ், அப்படியே அதே டெம்ப்ளேட்டில் பொறுந்துகிறானே!
சிறியப் பெண்ணாக இருந்தப் போது கேட்டப் பாடல் உதடுகளில் வந்தது!
கன்னிப் பெண்கள் நெஞ்சுக்குகுள் கையெழுத்து போட்டவன்!
அபினவ், என்று மனம் உருகும் போதே பாடலின் வார்த்தை அவளை தீயாய் சுட்டது!
கன்னிப் பெண்!!!! ஆனால் அவள் கன்னிப் பெண் இல்லையே!
🌼🌸❀✿🌷
“என்ன பர்வீன் இந்த சின்ன ஹெல்ப் கூட செய்ய மாட்டீயா?” சத்யா மருத்துவமனையின்