“ஓகே சக்தி. நீ வா போகலாம்!” என சொல்லி சத்யா நடக்க, புன்னகையுடன் அவள் பின்னே நடந்தாள் சக்தி.
🌼🌸❀✿🌷
“யாரைத் தேடுறீங்க?? ஸ்மார்ட்டா, ஹீரோ மாதிரி ஒருத்தன் அப்பப்போ உங்க கிட்ட வந்து பேசுவானே அவனையா?”
அபினவின் குரல் கேட்டு, கண்களால் அவனை தேடிக் கொண்டிருந்த அஹல்யாவின் முகம் தானாக மலர்ந்தது. அவசர அவசரமாக தன்னைக் கட்டுபடுத்திக் கொண்டப் போதும் அவளின் கண்களில் கூடுதல் ஒளியுடன் பிரகாசிக்க தான் செய்தது.
ஆனால் பேகி பேண்ட்டின் பாக்கெட்களில் கையை விட்டுக் கொண்டு நின்றிருந்த அபினவுக்கு பதில் சொல்லாமல் அமைதியாக இருந்தாள் அஹல்யா.
“என்ன டீச்சருக்கே பதில் தெரியலையா? அமைதியா இருக்கிங்க?” என்றான் அபினவ் சீண்டுபவனாக!
“ஹீரோ மாதிரின்னு சொன்னீங்களே யாரா இருக்கும்னு யோசிக்குறேன். ஒரு க்ளூவும் கிடைக்க மாட்டேங்குது,” என அஹல்யா சொல்ல, வைரமாக ஜொலித்த கண்களுடன் அஹல்யாவை பார்த்தான் அபினவ்.
“உங்களுக்கு இப்படி எல்லாம் கூட பேச தெரியுமா டீச்சர்?”
அதிர்ந்த அஹல்யா, மேலே ஒன்றும் சொல்லாமல் அமைதியாக இருந்தாள். பழைய நாட்களின் நினைவுகள் அவளுக்குள் ஓடியது
“அப்படி என்ன தான் இந்த அழகான தலைக்குள்ளே ஓடுதுன்னு எனக்கும் சொல்லக் கூடாதா?” அபினவ் அவளின் முக மாற்றத்தை கவனித்துக் கேட்டான்.