This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.
விஜயசாந்தியும், பத்மாவதியும் நின்றிருந்த இடத்தில் இருந்து விஷாகனும் சுவாதியும் பேசிக் கொண்டது கேட்கவில்லை என்றாலும், அவர்களின் body language வைத்து நடந்ததை ஓரளவிற்கு ஊகிக்க முடிந்ததால் பத்மாவதி திகைத்துப் போயிருந்தாள்!
“என்ன நடக்குது சாந்தி...?? எனக்கு ஒண்ணுமே புரியலை...” என்றாள் அவள் பார்த்ததை நம்ப முடியாத குழப்பத்துடன்.
“எனக்கும் முதல்ல அப்படி தான் இருந்துச்சு மம்மி-ஆர்... யோசிச்சு நானா கெஸ் செய்து வச்சிருக்கேன்...” என்று தன் ஊகத்தை பெரியவளிடம் விளக்கினாள் விஜயசாந்தி...
“சுவாதி விஷாகனோட மனைவியா??? அப்படியும் இருக்குமா???”
பத்மாவதியால் நம்பவே முடியவில்லை...
“எனக்கு அப்படி தான் தோணுது மம்மி-ஆர்... ஆனால், விஷாகனோ, சுவாதியோ வாய் திறந்து சொன்னால் தான் விஷயம் என்னன்னு முழுசா புரியும்...”
இருவரும் தங்களுக்குள் விவாதித்தபடி வீடு நோக்கி நடந்தார்கள்....!
வீட்டினுள் நுழைந்தார்களோ இல்லையோ அஸ்வின் பரபரப்புடன் அவர்கள் முன் வந்து நின்றான்...
“அம்மா, அண்ணி... எவ்வளவு நேரமா உங்களை தேடுறேன்... எங்கே போயிட்டீங்க??? நான் சொல்ல போறதை கேட்டா நீங்க நம்ப மாட்டீங்க..”
“என்ன???”
“விஷ்ணு என் கிட்ட இப்போ தான் சொன்னா... சுவாதி அக்க விஷாகனோட வைஃப்.....!!!!”
பத்மாவதியும், விஜயசாந்தியும் தங்களுக்குள் ஒரு பார்வை பார்த்துக் கொண்டார்கள்...
Bindu Vinod has written more than 31 Tamil series in Chillzee and many more Novels in Chillzee KiMo.
Copyright © 2009 - 2023 Chillzee.in. All Rights Reserved.