தொடர்கதை - உன்னருகே நான் இருந்தால்... - 41 - பிந்து வினோத்
41. எந்தன் உயிரே... எந்தன் உயிரே...
This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.
கணவன் சொன்னதைக் கேட்டு பாரதியின் முகத்தில் புன்னகை அரும்பியது.
“அப்படியா என்ன?” என்றாள் அவள் கேலியாக!
“ஆமாம்டா ரதி... என் செக்ரட்டரி வேற இன்னைக்கு முழு நாள் நான் பிஸின்னு சொன்னாங்க...” என்று விவேக் சொல்லவும்,
“சரி, இப்போ இந்த கால் கட் செய்த உடனே அவங்களை கூப்பிட்டு நாலு மணிக்கு உங்களுக்கு என்ன அப்பாயின்ட்மென்ட்ன்னு கேளுங்க...” என்றாள் பாரதி.
“ரதி, சொன்னால் புரிஞ்சுக்கனும்... ஃப்ரீயா இருந்தால் நான் கேள்வியே கேட்காம உடனே வந்திருக்க மாட்டேனா?”
“அப்படி இல்லைங்க, அந்த நேரத்தில் என்ன செய்யப் போறீங்கன்னு தெரிந்தால் அதற்கு ஏற்றது போல் ப்ளான் செய்யலாம் தானே?”
“சரி ரதி. நீ கேட்டு நான் எதை செய்யலை? சாரிடா, இன்னும் கொஞ்ச நாள் தான். அம்மா கம்பெனியில் இந்த வேலை முடிஞ்சா, அப்புறம் இவ்வளவு பிஸியா இருக்க மாட்டேன்.”
“அதெல்லாம் ஒரு பிரச்சனையும் இல்லை. நீங்க உங்க செக்ரட்டரி கிட்டப் பேசிட்டு...” என்ற பாரதியின் பேச்சை முடிக்க நேரம் கொடுக்காமல், குறுக்கிட்டு,
“இல்லை இல்லை... நீ லைன்லேயே இரு, நான் லதாவை இன்டர்காம்ல கூப்பிடுறேன்...” என்றான் விவேக்.
“சரிங்க...” என பாரதியும் அவன் சொன்னதை ஏற்றுக் கொண்டாள்.
அடுத்த சில வினாடிகள், பாரதி அமைதியாக மறு பக்கம் கேட்கும் சத்தத்தை மட்டும் கவனித்தாள்.