This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.
“இது நம்ம ரிசப்ஷன் ஃபங்ஷன்ல எடுத்த போட்டோ,” குழப்பத்துடனே பதில் சொன்னாள் சுந்தரி.
“என்ன சொல்ற மோகினி? சென்னை வெயில்ல குழம்பிப் போயிட்டீயா? நம்ம ரிசப்ஷனா? அது எப்போ நடந்துச்சு?” என்றான் இனியவன்.
அப்போது இனியவனின் போன் மீண்டும் வைப்ரேட் ஆனது. இப்போதும் டிஸ்ப்ளேவில் நவ்யாவின் பெயர் தெரிந்தது.
“நவ்யா கூப்பிடுறாங்க,” என்றாள் சுந்தரி.
“அட்டென்ட் செய்து என் காதுல வையேன் சுந்தரி.” இனியவன் சொன்னதும், சுந்தரி வேண்டா வெறுப்பாக அவன் சொன்னதை செய்தாள்.
“ஹலோ இனி? என்ன போன் கூட செய்யாம எங்கேயோ போயிட்டீங்க? ஹரிக்கு ஃபோன் செய்தேன் அவர் நீங்க கிளம்பியாச்சுன்னு சொன்னார். 5,6 ஹவர்ஸா வெயிட் செய்து வெறுத்துப் போயிட்டேன்!” ஃபோனில் நவ்யா பேசியது சுந்தரிக்கும் கேட்டது.
“நான் ஹாஸ்பிட்டல்ல இருக்கேன் நவ்யா. சாரி உங்களுக்கு இன்ஃபர்மேஷன் வந்திருக்கும்னு நினைச்சேன்,” என்றான் இனியவன்.
“ஹாஸ்பிட்டலா? எதுக்கு? என்னாச்சு இனி???”
“என் கார் ஆக்ஸிடன்ட் ஆயிடுச்சு நவ்யா. டாஷ்போர்ட் கண்ணாடி தலையில நிறைய இடத்துல பட்டு, ஆபரேஷன் செய்து எடுத்தாங்க. இன்னும் ஐசியூ வார்ட்ல தான் இருக்கேன்.”
“காட்! இனி, என்னப்பா இது? எந்த ஹாஸ்பிட்டல் சொல்லுங்க. நான் வரேன்.”
இனியவன் மருத்துவமனை பெயரைச் சொன்னான்.
“ஹரிக்கு என் ஆக்சிடன்ட் பத்தி சொன்னாங்களான்னு கேட்க மறந்துட்டேன் நவ்யா. நான்
Copyright © 2009 - 2023 Chillzee.in. All Rights Reserved.