This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.
சந்திரிகா மட்டும் இல்லாது, அரசியும் அங்கே இருந்தார்.
தமிழ்ச்செல்வி எழுந்து நிற்பதை கவனித்து,
“இதென்ன புது பழக்கம்? நாங்க என்ன உனக்கு எஜமானியா? உட்காரும்மா. வெற்றி சொன்னதுக்கும் நீ செய்றதுக்கும் தொடர்பே இல்லையே. நீ உண்மையாவே அவன் கதை சொன்ன அமுதினியான்னு தோணுது,” என்றாள் அரசி.
அரசி ஆழம் அளந்து பார்ப்பதை புரியாது திரு திரு என முழித்தாள் தமிழ்ச்செல்வி.
“அவன் கண்ணுக்கு அவன் காதலி வேற மாதிரி தெரிஞ்சிருப்பா அத்தை. நமக்கு அதே மாதிரி தோணுமா என்ன?” யசோதா இப்போதும் தமிழ்ச்செல்வியை காப்பாற்ற முனைந்தாள்.
“இருக்கும், இருக்கும்! ஏம்மா தமிழ் இருந்திருந்து இந்த வெற்றியை எப்படி நீ லவ் செய்த?” என தமிழ்செல்வியிடம் வினவினாள் அரசி.
“இதே கேள்வி தான் எனக்கும். இரண்டு பேரும் எங்கே சந்திச்சீங்க?” என்று சந்திரிகாவும் கேட்டாள்.
“அது... அது...”
“சங்கோஜமில்லாம சொல்லும்மா," என்றாள் சந்திரிகா
'ராஜமாதா'வின் கட்டளையை மீற முடியுமா? யசோதாவை பாவமாக பார்த்தாள் தமிழ்ச்செல்வி.
“சொல்லு தமிழ், பரீட்சைக்கு போறப்போ பஸ்ஸை விட்டுட்டு நின்ன கதை,” தமிழ்ச்செல்விக்கு கண்களால் சைகை செய்து, பொய் சொல்ல அடித்தளம் அமைத்துக் கொடுத்தாள் யசோதா.
“ஆமா... அப்படி தான்...” என சொல்லி, தன் கற்பனை திறனை தூசி தட்டி எழுப்பினாள்
Copyright © 2009 - 2023 Chillzee.in. All Rights Reserved.