அபினவ் முகத்தில் யோசனை வந்தது.
“உங்களுக்கு லாயர் யாராவது தெரியுமா? இல்லைன்னா நான் சென்னைல எனக்கு தெரிஞ்ச பாப்புலர் லாயர் கான்டாக்ட் நம்பர் தரேன். அவர் கிட்ட நான் ரெஃபர் செய்தேன்னு சொல்லி பேசுங்க. அவர் இந்த ஏரியால நல்ல லாயர் யாரோடவாவது கனக்ட் செய்து விடுவார்.”
“தேங்க்ஸ் சக்தி மேம். எப்படி நன்றி சொல்றதுன்னு தெரியலை. லூசு மாதிரி இது எதையும் யோசிக்காம இருந்திருக்கேன்.”
“இப்போவும் அதையே தான் தம்பி செய்ற! எங்களை அஹல்யா கிட்ட பேச விடு. உன்னை மாதிரியே நாங்களும் அவங்களுக்கு ஹெல்ப் செய்ய தான் ட்ரை செய்றோம். இப்படி வாசல்லேயே நிக்க வச்சு பேசிட்டு இருக்க,” என்றாள் சத்யா.
அதற்குள் சக்தி அவளுடைய மொபைல் கான்டாக்ட்ஸ் லிஸ்டில் தேடி ஒரு நம்பரை செலக்ட் செய்து அபினவிடம் நீட்டினாள்.
“இவர் பேர் ரங்கநாதன். பாப்புலர் லாயர். பேசுங்க அபினவ்!”
ஃபோனை கையில் வாங்கிக் கொண்டான் அபினவ். சத்யா அவனைப் பார்த்து கோபமாக முறைத்தாள்.
“சாரிக்கா, இரண்டுப் பேரும் உள்ளே வாங்க. நீங்க அஹல்யா கிட்ட பேசுங்க, நான் இந்த லாயர் கிட்ட பேசுறேன்,” என சொல்லி அவர்களுக்கு வழி விட்டான் அபினவ்.
வீட்டினுள் இருந்த அஹல்யா பயம் கலந்த முகத்துடன் இருந்தாள். அருண் நடப்பதை முழுவதும் புரிந்துக் கொள்ள முடியாத குழப்பத்துடன் அவளுடன் ஒண்டிக் கொண்டிருந்தான்.
“அஹல்யா, நான் சொன்னேனே சத்யா அக்கா. இது தான் அவங்க. இவங்க சக்தி!” பெண்கள் இருவரையும் அஹல்யாவிற்கு அறிமுகம் செய்தான் அபினவ்.