(Reading time: 8 - 15 minutes)
Uyir Ketkum amutham nee...!
Uyir Ketkum amutham nee...!

தொடர்கதை - உயிர் கேட்கும் அமுதம் நீ...! - பிந்து வினோத்

  

34. மனம் விரும்புதே உன்னை... உன்னை...

  

This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.

  

ந்துவின் கேள்விக்கு உடனடியாக பதில் சொல்லாமல் சில வினாடிகள் யோசித்த கண்மணி,

   

"தனியா இன்ட்ரெஸ்ட்ன்னு சொல்ல முடியாது... அவர் கிட்ட பிடிக்காத விஷயம்னும் எதுவும் இல்லை... ஆனால் அவர் தான் இப்போலாம் என்னை நேரா பார்த்தே பேச மாட்டேங்குறாரே..." என்றாள்!

  

"அப்புறம் என்னப்பா? நீங்க ஏன் இதை நினைச்சு கவலைப் படனும்? உங்களுக்கு என்ன குறைச்சல்? பார்க்க அழகா இருக்கீங்க... நல்லா பேசுறீங்க... இப்படி கண்டுக்காமல் பந்தா விடுறவங்க மேலே தனியா அன்பு இருந்தால் பரவாயில்லை... மத்தபடி ஏன் கவலைப் படனும்? நீங்களும் கண்டுக்காதீங்க..." என்றாள் வீணா.

  

"வீணா சொல்றது சரி தான்... உங்களுக்கு அப்படி என்ன வயசாயிடுச்சு... இன்னும் நிறைய படிக்கலாம்... வேலைக்கு போகலாம்... அதுக்கு அப்புறம் இதைப் பத்தி எல்லாம் யோசிக்கலாம்..." என்றாள் இந்து.

  

கண்மணி முகம் சட்டென்று மலர்ந்தது!

   

"நிஜம் தான் அக்கா... எனக்கும் கூட மேலே படிக்கனும்னு தான் ஆசை... சென்னை வந்தா படிப்பை தொடர ஈசியா இருக்குமேன்னு தான் முக்கியமா இங்கே வந்தேன்...."

  

"அப்புறம் என்ன... உங்களுக்கும் அப்படி ஒன்னும் உங்க அத்தைப் பையன் மேலே காதல் இல்லை... அதே போல அவருக்கும் இல்லை... பெரியவங்களுக்காக எல்லாம் கல்யாணம் செஞ்சுக்க முடியுமா என்ன?" என்றாள் வீணா.

  

"நிஜம் தான்... என்னையே பாருங்க.... ரெண்டு வருஷம் முன்னாடி அம்மாவுக்காக கல்யாணத்துக்கு சரின்னு சொன்னேன்... ஆனால் அவர் வேற ஒரு பொண்ணை விரும்புனதால அது நின்னுப் போச்சு... அதனால என்ன கெட்டுப் போச்சு? இப்போ, எனக்கு பிடிச்ச மாதிரியே ஒருத்தர் கிடைச்சு இருக்கார் தானே? அதுவும் இல்லாமல் ரெண்டுப் பேர் மனசும் ஒத்துப் போய் கல்யாணம் செஞ்சுக்குறது தான் நல்லது... நீங்க ஏன் இன்னொருத்தருடைய செகண்ட்

3 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.