தொடர்கதை - உயிர் கேட்கும் அமுதம் நீ...! - பிந்து வினோத்
35. மனம் விரும்புதே உன்னை... உன்னை...
This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.
அரை மனதுடன் சஞ்சீவை பிரிந்து வீணாவுடன் நடந்த இந்து, "ப்ச்... என்ன வீணா அப்படி உனக்கு அவசரம்..." என்றாள் கொஞ்சம் எரிச்சலாக!
வீணா கோபப்படவில்லை... மாறாக, "ஹலோ... நீ வந்திருக்கிறது ஒரு ஃபங்க்ஷனுக்கு... ஞாபகம் இருக்கா? கீதா அக்காக்கு நீ விஷ் பண்ண வேண்டாமா? அப்புறம், அங்கேயே நீ ஒரு முக்கியமான ஆளை வேற மீட் பண்ணனும்... அதாவது ஞாபகம் இருக்கா..." என்றாள் இலகுவாக.
"யாரு, கண்மணியா???" என்றாள் இந்து, இப்போது இயல்பாகி விட்ட குரலில்!
"ஆமாம்... கண்மணியே தான்... சரி சரி இந்து... கீதா அக்காவோட அம்மா இருக்காங்க... ரெடியா இரு... கட்டாயம் உன் கிட்ட ரூடா ஏதாவது சொல்வாங்க..." என்றாள் வீணா பக்கத்தில் நின்றுக் கொண்டிருப்பவர்களை கவனித்து!
அவினாஷ், ராஜீவுடன் பேசிக் கொண்டு நின்றிருந்த கீதாவின் அம்மா கல்பனா, இந்துவையும் வீணாவையும் பார்த்தவுடன் பேச்சை நிறுத்தி விட்டு,
"அட இந்து, நீ தானா இது??? கொஞ்சம் வெயிட் போட்டுட்டப் போல இருக்கே? புடவையில கொஞ்சம் குண்டா தெரியுற," என்றாள்.
இந்து பதில் சொல்லாமல் எப்போதும் இது போன்ற இக்கட்டான நிலையில் பயன்படுத்தும் ரெடிமேட் புன்னகையோடு நின்றாள்.
"அப்புறம்... உன்னோட கல்யாணம் விஷயம் எல்லாம் என்ன ஆச்சு? என்ன தான் பொண்ணு மேல தப்பு இல்லைன்னாலும், கல்யாணம் நின்னுப் போனால் அப்படி தான் எல்லோரும் கண்டப் படி பேசுவாங்க... அடுத்து ஒரு இடம் அமையுறது ரொம்ப கஷ்டம் தான்..." என்று தானே கேள்வியும் கேட்டு, பதிலும் சொல்லிக் கொண்டாள் கல்பனா.
ராஜீவும் அவினாஷும் என்ன செய்வது என்று புரியாமல் நிற்க, இந்துவே கல்பனாவிடம் பேசினாள்.